தான், அவள் சற்று முன் சொன்ன விஷயம் உரைத்தது.
ஆம் என்று தயக்கத்துடன் தலை அசைத்த பவித்ரா, ஒன்றிரண்டு வினாடிகள் அமைதிக்குப் பின்,
“உமா, உங்களைப் பார்த்தால் காஸிப்பிங் டைப்பாக தெரியலை... யார் கிட்டேயும் சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன்... நான் சொன்னதை அப்படியே மறந்திடுங்க... பாரதி என்னை நம்பி சொன்ன விஷயம் அது, பைத்தியம் போல உளறிட்டேன்... ப்ளீஸ்...”
“என்னங்க பவித்ரா, இதுக்கு எதுக்கு ப்ளீஸ் எல்லாம் சொல்றீங்க... எனக்குத் தெரியாது அதனால தான் கேட்டேன்...” என்றாள் உமா இப்போது மீண்டும் முன்பு போல் மின்னும் அதே புன்னகையுடன்.
“இல்லை, உங்க ரீயாக்ஷன் பார்த்து...” என்று இழுத்தாள் பவித்ரா.
“அப்படி இல்லை பவித்ரா, விவேக்கிற்கு அவங்க அண்ணன் மதுவிற்காக என்று கல்யாணம் செய்துக் கொண்டதில் அவ்வளவு சம்மதம் இல்லை... என்கிட்டேயே சொல்லி இருக்கார்... ‘அண்ணி, ஏதோ அண்ணனுக்கு லக், ஆனால் கல்யாணம் என்பது ரெண்டு பேர் மனம் ஒத்து போய் செய்யனுமே தவிர இது போல தங்கைக்காக, அம்மாக்காக எல்லாம் இல்லை’ன்னு சொல்வார்...”
“ஓ!” என்றால் பவித்ராவும் ஆச்சர்யத்துடன்.
“பார்த்தீங்களா, நீங்களும் ஆச்சர்யப் படுறீங்க... சரி, பாரதி விவேக் கிட்ட என்ன பதில் சொன்னாங்க?”
“வேற என்ன சொல்வா... ஸ்டுடென்ட்ஸ் உறவினகளோட ரொம்ப அதிகமா பேசி பழகுவதே சரி இல்லை... அப்புறம் எப்படி இந்த மாதிரி ரிலேஷன் எல்லாம் சரி வரும்னு சொல்லிட்டா...”
“ஓ... அவங்க சொல்றதும் சரி தான்... ஏன் பவித்ரா, பாரதியோட அம்மா அப்பா எல்லாம் எங்கே இருக்காங்க? ஊரிலேயா?”