“இல்லைம்மா, அது அவனோட அப்பா எடுத்த முடிவு... நான் என்ன செய்றது...” என்றாள் கற்பகம்.
ஸ்ருதியின் முகம் மேலும் இருண்டது!!!
****************
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நரேந்திரன் குடும்பத்தினர் ஒன்றாக இரவு உணவு உண்ணும் வேளையில்,
“ஸ்ருதி கல்யாணத்துக்கு வேற இடம் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களாம், அவ அம்மா போன் செய்தாங்க...” என்றாள் கற்பகம்.
விவேக் முகத்தில் புன்னகை மின்னியது.
“போதும்டா, இளிச்சது... இப்படியே இருந்தால் உனக்கு பொண்ணு கிடைச்ச மாதிரி தான்...” என்றாள் கற்பகம் அங்கலாய்ப்புடன்!
“அம்மா, நான் ஒன்னு சொல்லட்டுமா? இனிமேல் இந்த் விஷயத்துல நீங்க கவலைப் பட வேண்டாம்... நானே எனக்கு ஏத்த மாதிரி பொண்ணைக் கண்டுபிடிச்சுக்குறேன்...”
“இது என்னடா புது கதை? அப்படி யாராவது ஏற்கனவே பார்த்து வச்சு இருக்கீயா என்ன?”
“அப்படி ஏதாவது இருந்தால் சொல்றேன் ம்மா...”
“ஓஹோ, அப்படியே நாங்க ஏத்துப்போமாக்கும்? நீ வச்ச மாதிரியே தான் நாங்களும் செக் செய்வோம்...”
“நீங்க எத்தனை டெஸ்ட் வேணா வைக்கலாம்... பிரச்சனையே இல்லை...”