"சத்தியமா, ஏன் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்?"
"இல்லை, பொதுவா பிசினஸ் மக்கள் எல்லாம் பிஸ்னஸ் பற்றி நினைத்தே தான் காலம் தள்ளுவாங்கன்னு கேள்வி..."
"இப்படி பொதுப்படையா நினைப்பதே தப்பு... எங்க வீட்டில் எல்லோருக்கும் படிக்கும் பழக்கம் உண்டு..."
"ஓ!!!"
"சரி உங்கக் கதையை..."
"தரேன்... படிச்சுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க..."
"கட்டாயமாக..."
சில வினாடிகள் இருவருமேம் அமைதியாக இருந்தார்கள்...
"ஏன் பாரதி, இன்னைக்கு நான் என்ன பேச வந்தேன்னு நீங்க கேட்கவே இல்லையே?" என்றான் விவேக்.
"நீங்களே சொல்வீங்கன்னு ஒரு நம்பிக்கை தான்!" என்றாள் பாரதி அவனைப் போலவே.
விவேக்கின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது!
"நீங்க இப்படி எல்லாம் கூட பேசுவீங்களா பாரதி?"
"அப்படி என்னப் பேசினேன்?"
"நான் சொன்னது மாதிரியே திரும்பச் சொன்னீங்களே, அதை தான் சொன்னேன்..."