(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"சந்தோஷம்... கைக் கொடுங்க...." என்று ஏதோ வெற்றியைக் கொண்டாடுபவன் போல் கைகளை நீட்டினான் விவேக். தயக்கமாக இருந்தாலும், மறுத்தால் அவன் மீண்டும் கோபித்துக் கொள்வான் என உணர்ந்து தன் வலதுக் கரத்தை நீட்டி அவன் கைகளை பற்றி குலுக்கினாள் பாரதி. விவேக்கின் வலிமையான கைகள் தொட்டப் போது எழுந்த கூச்சத்தை மறைக்க அவள் பெரிதும் பாடுப் பட வேண்டி இருந்தது. இப்போதும் அவளை வெகு நேரம் கஷ்டப் படுத்தாது, அவளின் கையை விடுவித்து விட்டு,

  

"தேங்க்ஸ் பாரதி!" என்றான் விவேக்.

  

"பாரதி அக்கா, நீங்க இங்கே இருக்கீங்களா? உங்களுக்கு கொஞ்சம் முன்னாடி போன் வந்தது..." 

  

பக்கத்தில் இருந்து ஒலித்த சித்ராவின் குரல் கேட்டு அந்தப் பக்கம் திரும்பிய பாரதி,

  

"எனக்கா??? யாரு போன் செய்தா???" என்று விசாரித்தாள்.

  

"உங்க ப்ரெண்ட் பவித்ரான்னு சொன்னாங்க..."

  

"ஓ!" என்ற பாரதிக்கு, அப்போது தான் தன் கைப்பேசியை எடுத்து வராதது நினைவில் வந்தது. மொபைலில் தொடர்புக் கொள்ள முயற்சி செய்து விட்டு, பவித்ரா ஹாஸ்டல் போனிற்கு முயற்சி செய்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் .

  

"தேங்க்ஸ் சித்ரா... நான் அவக் கிட்டப் பேசுறேன்...”

  

"சரி அக்கா... நான் கடைக்குப் போறேன், உங்களுக்கு ஏதாவது வாங்கனுமா?"

  

"இல்லை சித்ரா, இப்போ எதுவும் வேண்டாம்..."

  

சித்ரா அங்கிருந்து நகர்ந்துச் செல்லவும்,

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.