"சொல்றேன், நீ எங்கே போன அதை சொல்லு முதல்ல..."
"மதுவோட அண்ணன் வந்திருந்தார்... பேசிட்டு வந்தேன்...." என்றாள் பாரதி சற்று தயக்கத்துடன்.
"மதுவோட அண்ணன்னா, நிரஞ்சனா???"
"இல்லைப்பா, விவேக்..."
"ஓ!!!"
அதில் இருந்த கேலி புரிந்தாலும், காட்டிக் கொள்ளாது,
"இப்போ சொல்லு, நீ எதுக்கு போன் செஞ்ச???" என்று வினவினாள் பாரதி!
“வேற என்ன, எல்லாம் நல்ல விஷயம் தான்... அந்த ப்ளேட் பிரபுவிற்கு உன்னை ரொம்ப பிடிச்சிருச்சாம்... எப்போ கல்யாணம் வச்சுக்கலாம்னு கேட்கிறார்..."
"அவனுக்குப் பிடிச்சால், நான் கல்யாணம் செஞ்சுக்கனுமா? எனக்குப் பிடிக்க வேண்டாமா?"
"பாரு, நான் தான் சொன்னேனே, உனக்குப் பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் உனக்கு சீக்கிரம் கல்யாணம் நடத்தி வைக்கப் போறேன்னு..."
"ப்ச், விளையாடாதே பவி... எனக்கு அந்த ஆளை சுத்தமா பிடிக்கலை...."
"சரி... உனக்கு எந்த மாதிரி ஆளை பிடிக்கும்னு சொல்லு..."
"ப்ச்... பவி..."
"விவேக் மாதிரி இருந்தால் ஓகேவா????"