"என்ன பாவம்?" என்றாள் பாரதி.
"லீவ் நாள்ல இவ்வளவு காலங்காத்தல உங்களைப் பார்க்க கிளம்பி வந்திருக்காரே பாவம் தானே?"
"ம்ம்ம்ம்ம்...."
"என்னவோ அக்கா நீங்க இப்போ எல்லாம் முன்பு போலில்லை...."
சொல்லி விட்டு சித்ரா போய்விட்டாள். பாரதிக்கே தான் முன்பு போலில்லை என்பது புரிந்தது. கீழே இருந்து அவள் பேரைக் கேட்ட உடனேயே வந்திருப்பது யார் என்று அவளுக்குப் புரிந்து விட்டது. முன்பே சொல்லி வைத்திருந்ததால் சித்ரா அவளிடம் மீண்டும் ஒருத் தடவை கேட்டு விட்டு கீழே சென்றப் போதும், அவளுக்கு வருத்தமாக தான் இருந்தது. விவேக் கட்டாயம் அவளின் கதைகளைப் படித்திருப்பான். அவனின் கருத்துக்களை கேட்க அவளுக்கு ஆர்வமாக இருந்தது... ஆனால், அவனின் அருகாமையில் தான் தடுமாறுவதும் அவளுக்குப் புரிந்தது. மீண்டும் ஒருமுறை ஒரு ஆண் மகனை நம்ப அவள் தயாராக இல்லை.... ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு, கண்களை மூடிக் கொண்டாள் பாரதி.
தொடரும்...