அவளின் நினைவில் வந்தன.
வீணாவின் பேச்சை நினைத்து சிரிப்பு வந்தது. உண்மையில் வீணா வீட்டிற்கு சென்று இருந்த போது அவள் மனதில் இருந்தது வேறு. சஞ்சீவை யார் என்ன என்று சரியாக கேட்காமல் 10 - 15 நிமிடங்கள் பேசியது அவளை வெட்கப்பட வைத்தது. எஸ் எ நிறுவனம் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இது போல் நடந்து கொண்டதை நினைத்து அவளுக்கு அசிங்கமாக இருந்தது. அதை சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் தான் அவள் நந்தினியின் பேச்சை எடுத்ததே. அவள் மனம் இப்பொழுது வீணாவிடம் இருந்து நந்தினியிடம் தாவியது.
நந்தினியும் இவர்களின் கல்லூரியில் படித்தவள் தான். கீதாவின் சக வகுப்பு மாணவியான நந்தினியுடன் தொடக்கத்தில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. நந்தினி இந்துவிடம் தானாகவே வந்து நன்றாக பேசுவாள். இப்போது முழுதாக நினைவில்லாத போதும், கல்லூரியில் ஏற்பட்ட எதோ ஒரு சிறுப் பிரச்னை தான் நந்தினியை இந்துவை எதிரியாக பாவிக்க வைத்தது. முதலில் சீனியர் என்றும், எல்லாம் மாறி விடும் என்று பொறுமையாக இருந்த இந்து ஒரு நிலைக்கு பின் அவளும் நந்தினுக்கு திருப்பி பதிலடி கொடுக்க ஆரம்பித்தாள். நந்தினியும் இந்துவும் ஜென்ம விரோதிகள் என்பது கல்லூரி மாணவர்கள் முதல் ஆசிரியர் வரை அனைவரும் அறிந்ததே. இருவரும் படிப்பிலும் அதே போல் கெட்டியாக இருந்ததால், அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. எதையும் அம்மாவிடம் மறைத்து பழக்கம் இல்லாததால், வழக்கம் போல் அம்மாவிடம் இதையும் சொன்னப் போது, நந்தினியை பற்றி பல கேள்விகளை கேட்ட பின், முதல் முறையாக அர்ச்சனா தன் மகள் எதிர்பார்க்காத ஒன்றை அவளிடம் சொன்னார். இந்து நந்தினிக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்...
இப்போது நினைத்தாலும் இந்துவிற்கு கோபமாக வந்தது... இப்போது அதைப் பற்றி நினைக்க வேண்டாம்... மனதை கட்டுப் படுத்தி வேறு பக்கம் திருப்பினாள்..
வீணாவின் கிண்டல் மீண்டும் நினைவில் வந்தது. வீணாவைப் பொறுத்த வரை எல்லாமே சாதாரண விஷயங்கள் தான். பார்த்த உடன் காதல் வர காதல் என்ன கடையில் விற்கும் கத்தரிக்காயா அல்லது முருங்கைக் காயா? உண்மையில் அவள் சஞ்சீவை முழுதாக பார்க்க கூட இல்லை. தன் தவறை எண்ணி அந்த கலக்கத்திலேயே இருந்து விட்டாள். ஆனாலும் மாலையில் சஞ்சீவிடம் அப்படி நடந்திருக்க கூடாது. அவனுக்கு எப்படி வீணா கிண்டல்