கேள்வியாய் பார்த்தவள், ராஜீவின் கண்களில் இருந்த விளையாட்டை காணவும்... புரிந்தவளாய்..
"ஹலோ நமக்கு கல்யாணமாகி இரண்டு வருஷம் முடியப் போகுது ஞாபகம் இருக்கட்டும்..." என்றாள்.
"நீ சொன்னால் தான் எனக்கு ஞாபகம் வருது... நாள் போக போக நீ ரொம்ப அழகாயிட்டே போற..."
அவனின் பேச்சில் சிவந்த அவள் கன்னங்களை கைகளால் வருடியவன், அனிச்சை செயலாக குனிந்து அவள் இதழ்களில் முத்தமிட்டான்.
"அண்ணா போகலாமா... ரெடியா?" என்று பொறுமை இன்றி வந்த சஞ்சீவின் குரலில் இருவரும் இந்த உலகத்திற்கு வந்தனர்.
"எனக்கு இன்னைக்கு ஆபீஸ் போகவே மூட் இல்லை கீத்ஸ்..."
"அடடா... அடுத்து அத்தை சொல்றதுக்குள்ள கிளம்புங்க...."
"சரி சாயந்திரம் ரெடியா இரு..." என்று கண் சிமிட்டி விட்டு கிளம்பினான் ராஜீவ்.
தொடரும்...