"நிரஞ்சன் ஒன்னா இருக்கும் போது, எப்படி இவனுக்கு மட்டும் பணம் பிரிச்சு தர முடியும்?"
என்ன சொல்வது என்று புரியாமல், "ம்ம்ம்ம்..." என்று முனகினாள் பாரதி.
"நீயே சொல்லும்மா...."
"ஏன் மேடம் அவரை பேங்க் லோன் ஏதாவது வாங்க சொல்லலாமே?"
"இல்லை பாரதி பணம் இல்லாமல் இல்லை... அதை தருவதில் சில பிரச்சனைகள் இருக்கு..."
"புரியுது, ஆனால், விவேக் சார் திறமையானவர், கட்டாயம், நல்லவிதமா தான் புது பிஸ்னஸ் நடத்துவார்..."
அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு,
"அவன் திறமை மீது எனக்கும் சந்தேகம் இல்லை... ஆனால் அது மட்டும் இல்லாமல்....வேற ஒரு விஷயமும் இருக்கு..." என்று சொல்ல தயங்குபவள் போல் கற்பகம் நிறுத்தினாள்
பாரதி வேறு என்ன என்பது போல் பார்க்கவும்,
"இது எங்க குடும்ப ரகசியம் பாரதி, நீ இதை யார் கிட்டேயும் சொல்ல மாட்டாய் என்கிற நம்பிக்கையில் சொல்கிறேன்... விவேக் எங்க சொந்த மகன் இல்லை... எங்களுடைய தத்து மகன்..."
"என்ன???"
"ஆமாம்! என்ன தான் சொந்த மகன் போல் வளர்த்தாலும், சொத்தை பிரிச்சு அவனுக்கு தர வேண்டும் எனும் போது, மனதில் சின்ன சலனம் வருது..."