கௌஷிக்கிற்கு ராதிகாவின் குழப்பம் புரிந்தது!
"சாரி, திடீர்னு இப்படி வந்து கேட்டால் உனக்கு குழப்பமா இருக்கும். எனக்குப் புரியுது! உன் அப்பா அம்மா யோசிச்சு முடிவு எடுக்கும் போதே நீயும் ஒரு முடிவு எடு. ஆனால் நல்ல முடிவா எடு ப்ளீஸ்."
பளீரென்ற புன்னகையுடன் சொன்னான் கௌஷிக்!
அவனின் வித்தியாசமான பார்வையையும், நடவடிக்கைகளையும் பார்த்திருந்த ராதிகாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. கூடவே, அவள் தான் அதற்கு காரணம் என்று கௌஷிக் சொன்னது மெல்லிய கர்வத்தையும் கொடுத்தது! ஆனாலும் ஒன்றும் சொல்லாது நின்றாள்!
ராதிகா அமைதியாக நிற்பதன் காரணம் புரியாமல் ஒரு சில வினாடிகள் பார்த்த கௌஷிக்,
"என்னை புரிஞ்சுக்க ட்ரை செய், ராது. நான்..." என்றுப் பேசியப்படி கௌஷிக் அவளருகே வரவும், ராதிகா யோசிக்காமல் பின்னே நகர்ந்து தள்ளிச் சென்று நின்றாள்.
"ஐ ஆம் சாரி... நீ யோசிச்சு முடிவு எடு!"
கௌஷிக் வீட்டினுள் சென்ற பின்பும் ராதிகா தோட்டத்திள் அதே இடத்திலேயே நின்றிருந்தாள்.
அவளுக்கு இப்போதும் குழப்பமாகவே இருந்தது!
**********
அதன் பின் நாதன் மும்முரமாக கௌஷிக் பற்றிய விபரங்களை சேகரித்தார். அவனைப் பற்றி எந்த விதமான தவறான கருத்தும் யாரிடமும் இல்லை. எல்லோரும் நல்ல கருத்துக்களையே பகிர்ந்துக் கொண்டனர்.
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.