தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 42 - பிந்து வினோத்
கௌஷிக்கிற்கு ராதிகாவின் குழப்பம் புரிந்தது!
"சாரி, திடீர்னு இப்படி வந்து கேட்டால் உனக்கு குழப்பமா இருக்கும். எனக்குப் புரியுது! உன் அப்பா அம்மா யோசிச்சு முடிவு எடுக்கும் போதே நீயும் ஒரு முடிவு எடு. ஆனால் நல்ல முடிவா எடு ப்ளீஸ்."
பளீரென்ற புன்னகையுடன் சொன்னான் கௌஷிக்!
அவனின் வித்தியாசமான பார்வையையும், நடவடிக்கைகளையும் பார்த்திருந்த ராதிகாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. கூடவே, அவள் தான் அதற்கு காரணம் என்று கௌஷிக் சொன்னது மெல்லிய கர்வத்தையும் கொடுத்தது! ஆனாலும் ஒன்றும் சொல்லாது நின்றாள்!
...
This story is now available on Chillzee KiMo.
...
அதன் பின் நாதன் மும்முரமாக கௌஷிக் பற்றிய விபரங்களை சேகரித்தார். அவனைப் பற்றி எந்த விதமான தவறான கருத்தும் யாரிடமும் இல்லை. எல்லோரும் நல்ல கருத்துக்களையே பகிர்ந்துக் கொண்டனர்.