(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

படுக்கையில் சாய்ந்து அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த காஞ்சனா, மருமகளை சந்தோஷமாக உள்ளே அழைத்தார்.

  

"வாம்மா கீதா... எனக்கு இன்னைக்கு சந்தோஷமாக இருக்கு...."

  

"அதெல்லாம் இருக்கட்டும் அத்தை, மாத்திரை சாப்பிட்டீங்களா?"

  

"ம்ம்ம் ஆச்சு... இன்னும் கொஞ்ச நாள்ல அதெல்லாம் தேவையே படாது... சஞ்சீவ் இப்படியே பொறுப்பா நடந்து அவனுக்கும் கண்மணிக்கும் கல்யாணம் முடிஞ்சா அப்புறம் எனக்கு கவலையே இல்லை... பேரன் பேத்திங்களை செல்லம் கொஞ்சியே என் காலத்தை ஓட்டிடுவேன்..."

  

அந்த பேச்சினால் மனதில் எழுந்த சஞ்சலத்தை வெளியே காட்டாது,

  

"எல்லாம் நல்ல படியா நடக்கும் அத்தை..." என்றாள் கீதா.

  

"ஆமாம்ம்மா, எனக்கும் இப்போ அப்படி தான் தோணுது... அதனால தான் தம்பி கிட்ட போன் போட்டு கண்மணியை இங்க கொஞ்ச நாள் தங்குற மாதிரி அனுப்பி வைக்க சொல்லி இருக்கேன்.... இந்த பையன் கண்ணுல படுற மாதிரி அவள் இங்கே இருந்தால் தானே நல்லது..."

  

"ஆமாம் அத்தை" என்று உதட்டளவில் ஆமோதித்து விட்டு, காஞ்சனாவிடம் விடைப்பெற்று கிளம்பினாள் கீதா.

   

*****

   

டுக்கையில் அமர்ந்து லேப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த ராஜீவ், கீதா அறையின் உள்ளே வரவும், அவளைப் பார்த்து விசில் அடித்தான்,

  

"என்ன அதிசயம் கீதா மேடம் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கீங்க... எப்போவும்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.