(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"அடடா எனக்கு மயக்கமே வருது... உலக வரலாற்றில் முதல் முறையாக கீதாவுடன் பேச சென்ற வீணா பத்து நிமிடங்களில் பேசி முடித்து திரும்பி வந்திருக்கிறாள்..." என டிவி விளம்பர பாணியில் பேசி கேலி செய்தான்!

  

"யார் பேசி முடித்தது? ராஜீவ் அக்கா கிட்ட இருந்து போனை வாங்கி கட் பண்ணி வச்சுட்டார்..." என்றாள் வீணா!

  

"அடடா! இந்த ஐடியா எனக்கு இது வரை தோணவே இல்லையே... நல்ல ஐடியா தான்...." என்ற படி கண் அடித்தான் அவினாஷ்.

  

பதில் சொல்லாது வீணா சிந்தனையில் ஆழ்ந்திருக்கவும்,

  

"ஏன்டா வீணா, கோபமா?? உனக்கும் கல்யாணமாகி ரெண்டு வயசில குழந்தையும் இருக்கு.. நீ புரிஞ்சுக்கனும்..." என்றான் அவினாஷ் மென்மையாக!

  

குழந்தைக்கு எடுத்துச் சொல்வது போல் அமைதியாக பேசிய கணவனின், தலை முடியை கலைந்த வீணா,

  

"கோபம் எல்லாம் இல்லை... வெள்ளிக் கிழமை மீட் பண்ணும் போது அக்காவை கிண்டல் பண்றதா, இல்ல இந்துவை கிண்டல் பண்றதான்னு யோசிக்கிறேன்... இந்த தடவை கீதா அக்கா தான்... இந்து எஸ்கேப் ஆயிட்டாள்!!!" என்று சொல்லி கண் சிமிட்டி சிரித்தவள், கணவனோடு சேர்ந்து மகளுடன் விளையாட ஆரம்பித்தாள்.

    

தொடரும்...

Go to Uyir Ketkum amutham nee...! story main page

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.