Page 3 of 6
கஸ்தூரியும், கோமதியும் வந்த பிறகு சுந்தரிக்கும் அதிகம் வேலை இருக்கவில்லை. ஜெயஸ்ரீயும் ரமணியும் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தாள்.
“வா சுந்தரி. கோமதி கிட்ட சமையல்ல காரம் கம்மி பண்ண சொன்னீயா?” ஜெயஸ்ரீ மருமகளுக்கு நினைவுப் படுத்தினாள்.
“சொன்னேன் மாமி. மாமாக்காக உப்பும் குறைச்சு போட சொன்னேன்.” – சுந்தரி ஜெயஸ்ரீ பக்கத்தில் அமர்ந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
கிழங்கு, பப்பாளின்னு எத்தனை அதுக்குள்ளே துளிர் விட ஆரம்பிச்சிடுச்சு. எவ்வளவு வருஷமா நானும் வச்சுப் பார்க்குறேன்னு நினைக்குறீங்க? அவளுக்காகவே அடுத்து முருங்கை கொம்புக்கும் சொல்லி வச்சிருக்கேன்.”