(Reading time: 7 - 14 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

ராஜீவ் சென்றதும், அவனிடம் சொன்னதுப் போல,  காஞ்சனா வந்தால் தனக்காக காத்திருக்காது உணவு அருந்த சொல்லுமாறு கலாவிடம் சொல்லி விட்டு மாடிக்குச் சென்றாள் கீதா.

  

தங்கள் அறையில் இருந்த சோஃபாவில் கணவனின் அருகில் சென்று அமர்ந்தாள். அவளை நேராக பார்த்த ராஜீவ்,

  

"உனக்கு என் மேல கோபம் இல்லையா?" எனக் கேட்டான்.

  

"கோபமா, எதுக்கு?"

  

"நேத்து நீயும் வீணாவும் ஏதோ பேசிட்டு இருந்தீங்களே... ஏதாவது முக்கியமான விஷயமா? வீணாக்கு நான் வேணும்னா போன் போட்டு சாரி சொல்லவா?"

  

கீதாவின் முகத்தில் புன்னகை தோன்றியது...

  

"நீங்க இதை பத்தி யோசிக்கவே வேண்டாம்... வீணா ஒன்னும் சின்னக் குழந்தை இல்லை... இதுக்கு எல்லாம் கோபப் பட மாட்டாள்..... ஆனால்...." என்று இழுத்தாள்.

  

"என்ன ஆனால்...?"

  

"வந்து... அடுத்து என்னைப் பார்க்கும் போது கேலி பண்ணி உயிரை எடுப்பாள்... அவ்வளவு தான்..."

  

"ஓ! சரி வீணாவை விடு... உனக்கு கோபம் இல்லையா? என் கிட்டே ஏதோ பேசனும்னு நீ சொல்லிட்டு இருந்தப்போ என்னன்னு கூட நான் கேட்காமல்...."

  

அவன் சொல்ல வருவதை அறிந்தவளாய், அவன் பேச்சில் குறுக்கிட்டு,

  

"ஹே லூசு... எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ற? நான் என்ன வேண்டாம் வேண்டாம்ன்னு

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.