பிடிச்சிருக்குன்னு தான் தோணுது......"
"குட் டார்லிங்... அப்போ உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கணுமே....?"
ஆம் என்பது போல் தலை அசைத்த கீதா,
"சந்தோஷம் தான்... ஆனால், அத்தையை நினைச்சால் கொஞ்சம் பயமாகவும் இருக்கு......" என்றாள் தயக்கத்துடன்.
ராஜீவ் பதில் சொல்லாது யோசனையில் ஆழ்ந்திருக்கவும், கீதாவே தொடர்ந்தாள்,
"இந்து ரொம்ப சென்சிட்டிவ், ராஜ்.... அத்தை ஏதாவது சொன்னால் அதை சாதாரணமா எடுத்துப்பாளா தெரியலை... நான் நினைக்கிறது உண்மையாக இருந்து, இந்த கல்யாணத்தில ஏதாவது பிரச்சனை வந்தால் இந்துவால் மட்டும் இல்லை அர்ச்சனா ஆன்ட்டியாலேயும் தாங்கிக்க முடியாது... அத்தைக்கும் வேற மாதிரி விருப்பம் இருக்கு... அப்புறம் எனக்கும் இந்துக்கும் இருக்கிற ஃபிரெண்ட்ஷிப் வேற... அதையும் அத்தை தப்பா எடுத்துப்பாங்களான்னு தெரியலை... இந்து வேற நம்ம கல்யாண டைம்ல அவங்க கிட்ட கொஞ்சம் கோபமா பேசிட்டா... அத்தை அதை மறந்திட்டேன்னு சொன்னாலும் கூட எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு..."
கீதாவின் கவலை ராஜீவிற்குப் புரிந்தது. செல்லமாக மனைவியின் தலையை கையால் தொட்டு ஆட்டியவன்,
"எனக்கு என்னவோ நீ தேவை இல்லாமல் ரொம்ப யோசிக்கிறேன்னு தோணுது...." என்றான்.
"இல்லை ராஜ், அத்தைக்கு இதைப் பத்தி தெரிய வரும் போது நான் தான் இதுக்கு காரணம்னு அவங்க நினைச்சா என்ன செய்றது?"
"அது எப்படி, டார்லிங்? சரி ,முதல்ல நீ எதை வச்சு சஞ்சீவுக்கு இந்து மேல இன்டெரெஸ்ட் இருக்குன்னு சொல்ற, அதை சொல்லு?"