(Reading time: 7 - 14 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

சொல்லும் போதா நீ என்னை தூக்கிட்டுப் போன? எனக்கே நான் சொல்ல வந்தது எல்லாம் மறந்துப் போச்சு தெரியுமா..." என்று மையலுடன் அவனை நோக்கினாள்.

  

அவர்கள் இருவர் மட்டும் இருக்கும் தனிமையில், சில சமயம் இப்படி 'செல்லம்' கொஞ்சிக் கொள்வது அவர்களுக்கு வாடிக்கை தான்.

  

னதில் இருந்த கவலை பெரிதும் இறங்கி விட, அவளருகில் நகர்ந்து, அவளை இறுக்க அணைத்தான் ராஜீவ்.

  

"இப்போ தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு... ஆனால் இந்த மாதிரி லுக் எல்லாம் இப்போ வேண்டாம்... நான் ஆஃபீஸ்க்கு போகனும்... சரி, இப்போ சொல்லு அது என்ன விஷயம்...?"

  

"ராஜ், இது சஞ்சீவ் பத்தின விஷயம்... வந்து... உங்களுக்கு தெரியும் தானே அத்தை அவருக்கு அவங்க தம்பி மகளை கல்யாணம் பண்ணி வைக்கனும்னு விரும்புறாங்க..."

  

"ஆமாம்... தெரியும்.... கண்மணி ரொம்ப நல்ல பொண்ணு... சஞ்சீவுக்கு ஏத்த ஜோடின்னு கூட சொல்லலாம்..."

  

கீதாவின் முகத்தில் தயக்கத்தைக் காணவும்,

  

"என்னடா, இதில என்ன அப்படி முக்கியமான விஷயம்?" என்று அவளிடம் கேட்டான்.

  

"வந்து ராஜ், சஞ்சீவுக்கு தான் இந்த கல்யாணப் பேச்சில விருப்பம் இல்லையே......"

  

"ம்ம்ம்ம்... அவன் அப்படி தான் சொல்லிட்டு இருக்கான்... பார்ப்போம்... ஆனால், இது இல்லை நீ பேச வந்த விஷயம்... வேற எதுவோ... அது என்ன சொல்லு...."

  

"சஞ்சீவ் வேற ஒரு பொண்ணை லவ் பண்றாருன்னு நினைக்கிறேன்......."

  

"ஓஹோ! அது தானே பார்த்தேன் எப்படிடா அவன் கிட்ட இவ்வளவு திடீர் மாற்றம்ன்னு.... அது

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.