தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 30 - பிந்து வினோத்
30. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தெளிவில்லாத மன நிலையில் இருந்த பாரதி, கற்பகத்திற்கு பதிலாக மெல்ல சிரித்து வைத்தாள்.
"பை தி வே பாரதி, உனக்கு சிம்பிளாக இருப்பது பிடிக்கும்னு எனக்குத் தெரியும். இருந்தாலும், ஏன் ரிசெப்ஷனுக்கு கொஞ்சம் கூடுதலாக நகை போட சொன்னேன் தெரியுமா? நாம டெக்ஸ்டைல் ஷோரூம்ல என் சித்திப் பொண்ணு பார்த்தோம் ஞாபகம் இருக்கா? அவ உன்னைப் பார்த்துட்டு, நீ ஏதோ ஒன்னும் இல்லாதவள் போல பேசினா... உனக்கு என்ன குறைச்சல்? அழகு, அறிவு, படிப்பு, திறமை, வேலை, கூடவே பணமும் இருக்கு.... அப்புறம் ஏன் அவங்களை எல்லாம் அப்படி பேச அலோ செய்யனும்? அதற்காக தான் அந்த நகை எல்லாம்...."
கேட்காமலே கற்பகம் கொடுத்த விளக்கத்தை கேட்டு,
"அதெல்லாம் பரவாயில்லை..." என்ற பாரதி, வாக்கியத்தை முடிக்காமல் தடுமாறினாள்.
"என்னை எப்படி கூப்பிடுறதுன்னு தடுமாற்றமா? அத்தைன்னு கூப்பிடு... அன்னைக்கு அந்த மாலாவிடம் உன் பணம் பற்றி எல்லாம் சொல்லி சமாளித்தேன்... விவேக் மட்டும் அதை கேட்டிருந்தா அவ்வளவு தான்..."
கற்பகம் தொடர்ந்துப் பேசிக் கொண்டிருந்தாள்...
ஆனால், அதற்கு மேல் கற்பகம் பேசியது எதுவுமே, பாரதியின் கருத்தில் பதியவில்லை!!! ஜவுளிக் கடையில் பாரதி அவர்கள் பேச்சை கவனித்ததை கற்பகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை... அப்படி என்றால் அவர் சொல்வது எல்லாம் உண்மை... அது உண்மை என்றால், பவித்ராவும், உமாவும் சொல்வதுப் போல், விவேக்கிற்கு அவள் மீது காதலா??!!??
யாரோ தன் கைகளைப் பிடிப்பதை உணர்ந்து சிந்தனையில் இருந்து வெளியில் வந்த பாரதி, பவித்ரா தன்னிடம் பேசுவது புரிந்துக் கவனித்தாள்.
"ஐ ஆம் ஸோ வெரி ஹாப்பி ஃபார் யூ, பாரு... உன் வாழ்க்கையில் இனி எல்லாம் நல்லதாக தான் நடக்கும்... இப்போ விவேக்கின் பொறுமையை இதற்கு மேல் சோதிக்க கூடாது, மேடம்