எழுந்து வரீங்களா?"
"பொறுமையா??? நீ வேற பவித்ரா... அரை மணி நேரமா விவேக் ஃபோன் மேல ஃபோன் போட்டு தொல்லை செய்துட்டு இருக்கான்... நான் தான் பாரதி ரெடி ஆகட்டும்னு அவன் காலை அட்டெண்ட் செய்யாமல் இருக்கேன்..." என்றாள் கற்பகம்.
பவித்ராவும், உமாவும் கேலியாக சிரிக்கவும், பாரதியின் முகம் தானாக சிவந்தது. அதை கிண்டல் செய்தப்படி, அவளை விவேக்கின் அறையின் கதவருகில் அழைத்துச் சென்றார்கள்.
"என்ன பாரு, இதற்கு மேல் நீயே மேனேஜ் செய்துப்ப தானே?"
"போதும் பவித்ரா, விவேக்கின் பொறுமையை ரொம்ப சோதிக்க கூடாது... பாரதி நீ போ..." என்றாள் உமா!
அவர்களின் பேச்சில் சிவந்திருந்த முகத்துடன், மனதில் இனம் புரியாத பரபரப்புடன் அந்த அறையின் உள்ளே நுழைந்தாள் பாரதி.
அவளுக்காக அறைக்குள்ளேயே அங்கும் இங்குமாக நடந்தபடி காத்துக் கொண்டிருந்த விவேக், மலர்ந்த முகத்துடன் அவளை வரவேற்றான். கதவருகில் சென்று தாளிட்டவன்,
"வா பாரதி, உட்கார்...” என்றான்.
சற்றே தயக்கத்துடன் அவள் அமர்வதை பார்த்தப்படி நின்றிருந்த விவேக், புன்னகையுடன் அவள் அருகில் சென்று அமர்ந்தான். அவளின் வளைக் கரத்தை கைகளில் ஏந்தியவன்,
“வெல்கம் மை பெட்டர் ஹாஃப். இவ்வளவு சீக்கிரம் நம்ம கல்யாணம் நடக்கும்னு நான் நினைக்கவேயில்லை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண்மையான்னு சந்தேகமா கூட இருக்கு...”
பேசியப் படி பாரதியின் கையை தன் கையால் உயர்த்தினான் விவேக்... விரல்களில் முத்தமிடப் போகிறான் என்ற எதிர்பார்ப்பில் பாரதி சிலிர்த்துக் காத்திருந்தாள். அவள்