தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 30 - பிந்து வினோத்
31. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விவேக்கின் மனநிலை உணர்ந்துக் கொண்டவளாக, சற்று முன்பு பவித்ராவும், உமாவும் சொன்னதை சுருக்கமாக சொன்ன பாரதி, அவனிடம்,
“இதெல்லாம் நிஜமா?“ எனக் கேட்டாள்.
“ஓஹோ, எல்லாம் நம்ம சிஸ்டர் வேலையா? யெஸ், ரதி... நான் சொன்னதுப் போல, செகன்ட் டைம் உன்னைப் பார்த்ததில் இருந்து நான் அப்படியே வானத்தில் பறந்துட்டு இருந்தேன்... அன்று உன்னை ஒரு இக்கட்டான சுழலில் நிறுத்தி இருந்தாலும், அதை என்ன அழகா சமாளித்தாய்... நம் சமுதாயத்தில் சில விஷயங்கள் இருக்கு, ரதி... இதெல்லாம் பெண்களை மட்டம் தட்ட அப்படின்னு லிஸ்ட் போட்டு வச்சிருக்காங்க... ஒரு பெண்ணை அழகில்லைன்னு சொல்றது, கிண்டல் செய்வது, அவளின் வாழ்வில் முன்பு நடந்த கசப்பான சம்பவங்களை சொல்லி குத்திக் காட்டி பேசுவது, இப்படி எத்தனையோ... இதெல்லாம் பெண்கள் மனசை கஷ்டப் படுத்த பயன்படுத்தும் டெக்னிக்ஸ் தானே... அன்று பார்த்திபனும் அதையே தான் செய்தான்... ஆனால் என்ன, அவன் எனக்காக செய்தான்... சோ, அவன் மேல் நான் தப்பு சொல்ல முடியாது... இருந்தாலும், அந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையை நீ சமாளித்த விதம் என்னை ரொம்பவே கவர்ந்தது... மற்றவர்களுக்கு எப்படியோ, என் தங்கைக்கும் அதே போல் ஒரு பாஸ்ட் இருக்கு தானே...”
விவேக் விலாவரியாக விளக்கம் கொடுக்க, பாரதி அமைதியாக அவன் சொல்வதைக் கேட்டபடி அமர்ந்திருந்தாள். பழைய கசப்பான நினைவில் ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்த விவேக், அவளைப் பார்த்து விட்டு,
“இப்போ எதுக்கு அதெல்லாம், வேற முக்கியமான விஷயம் எல்லாம் இருக்கே...” கண்சிமிட்டியபடி சொன்னவன், ரமேஷை அவன் சந்தித்ததைப் பற்றி சொன்னான். பின் ரமேஷின் வீட்டிற்கு சென்றதையும் சொன்னான்.
“நம்ம மச்சான் என்ன சூப்பர் ஃபாஸ்ட்... ஒன்று இரண்டு நாளில் என்னை பற்றி எல்லா விஷயத்தையும் கலெக்ட் செய்துட்டாரே!” என்று சொல்லி சிரித்தான் விவேக்.
அவனின் சிரிப்பில் கலந்துக் கொள்ளாமல், எப்படி இவனால் சிஸ்டர், மச்சான் என்றெல்லாம்