நினைவில் வந்தது. அவள் முகத்தில் தானாக வெட்கப் புன்னகை தோன்றியது.
பாரதியின் முகத்தில் தோன்றிய மலர்ச்சியை கவனித்த விவேக்,
“மீதி கன்ஃபெஷன் எல்லாம் நாளைக்கு வைத்துக் கொள்வோமா, ரதி, ப்ளீஸ்?” என்றான்.
அவனின் கொஞ்சலை இயல்பாக முதல் முறை ரசித்தவள்,
“இன்னும் ஒரே ஒரு கேள்வி, ப்ளீஸ்....” என்றாள்
“அடடா, லெக்சரர் மேடமை கல்யாணம் செய்துக் கொண்டால், இப்படி கேள்வியா கேட்டு தாக்குவாங்கன்னு யாருமே இதுவரை சொல்லவே இல்லையே.... இது தான் லாஸ்ட் ஒன்... இதற்கு மேல் கேள்வி கேட்க நான் உன்னை ஃப்ரீயா விட்டால் தானே?”
விவேக்கின் செல்ல மிரட்டலை புன்னகையோடு ஏற்றுக் கொண்டு, அவன் மீது இன்னும் சற்றே வாகாக சாய்ந்து அமர்ந்த பாரதி,
“கேள்வி கேட்குறதுக்கு முன், முதலில் சாரி... நிறையத் தடவை உங்களை வீணா அலைக்கழிச்சிருக்கிறேன்... ஆனால், என் மேல் இவ்வளவு அன்பு இருக்குன்னு சொல்லும் நீங்க, சில தடவை என்னைக் கண்டுக்காமல் இருந்திருக்கீங்க தானே?”
“யாரு? நானா???”
“ஆமாம், நீங்க தான்... எத்தனை தடவை மதுவை பிக்கப் செய்ய காலேஜ் வந்து இருக்கீங்க... அப்போ எல்லாம் என் பக்கம் கூட நீங்க பார்த்ததே இல்லையே???”
“அட, நீயும் என்னை சைட் அடிச்சியா?” கிண்டலாக கேட்ட விவேக், பாரதி முறைப்பதைப் பார்த்து புன்னகை புரிந்தான்!
“என் செல்ல லெக்சரருக்கு வரும் கோபத்தைப் பாரு... யாரு சொன்னது உன்னை