அவனுள் பரவியது.
மகனின் கையை பிடித்துப் பேசியப்படி வந்தாள் அவள். அவனை கடந்துச் சென்றப் போது பெயருக்கும் திரும்பிப் பார்க்காமல் நேராக பார்த்தப்படி சென்றாள்.
ரோந்து செய்வதாகக் காட்டிக் கொண்டாலும் அபினவின் கண்கள் அஹல்யாவையே தொடர்ந்துக் கொண்டிருந்தது.
அவள் சரியாக மூன்று கடைகளுக்கு சென்றாள்.
அங்கே வேண்டியவற்றை வாங்கியவள், வேறு யாருடனும் பேசவே இல்லை. திரும்பிக் கூட பார்க்கவில்லை! தான் உண்டு தன் வேலை உண்டு என்று வந்த வேலையை முடித்து விட்டு மகனுடன் நடந்துச் சென்றாள்.
இவளைப் பற்றி ஏன் ஊரில் தவறாக பேசுகிறார்கள்?
ஏன் என்ன எனத் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் அவனுக்குத் தோன்றியது.
மார்க்கெட்டில் ரோந்து முடித்து திரும்பும் போது கான்ஸ்டபில் விஜயனிடம் பேச்சுக் கொடுத்தான்.
“உங்க பொண்ணு எந்த கிளாஸ் படிக்குறா விஜயன்?”
“செவன்த் ஸ்டாண்டர்ட் சார்.”
“படிப்புல எப்படி?”
“நல்லா படிப்பா சார். மேத்ஸ்ல எப்போவும் நூத்துக்கு நூறு தான். அன்னைக்கு மார்கெட்ல பார்த்தோமே அஹல்யா டீச்சர் அவங்க தான் அவ மேத்ஸ் மிஸ்.”
அபினவ் அஹல்யாவைப் பற்றி எப்படி கேட்பது என்று யோசித்துக் கொண்டிருக்க, விஜயனே