அவளைப் பற்றி சொன்னார்.
“அட ஆமாம். அவங்க வீடு கூட செவன்த் க்ராஸ் ஸ்ட்ரீட் பக்கம்னு சொன்னீங்களே?”
“இல்லியே சார். இவங்க வீடு ட்வென்டி ஃபோர்த் க்ராஸ் ஸ்ட்ரீட். ஒரு சர்ச் இருக்குமே அதுக்கு பக்கத்துல சார்.”
“சரி, சரி. வேற யாரையாவது அப்போ செவன்த் கிராஸ் ஸ்ட்ரீட்ல இருக்காங்கன்னு சொல்லி இருப்பீங்க.”
“இருக்கும் சார்!”
ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரிடம் ரிப்போர்ட் செய்து விட்டு, ட்யூட்டி முடித்து கிளம்பிய அபினவ், அவனுடைய பைக்கை நேராக இருபத்தி நான்கு குறுக்கு தெருவை நோக்கி செலுத்தினான்.
அஹல்யாவை பற்றி அவ்வளவு கதை சொன்ன விஜயன் அவளுடைய கணவனைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை!
எதனாலோ அஹல்யாவை பற்றி முழுவதுமாக தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் அவனுக்குள் எழுந்து இருந்தது.
இருபத்தி நான்காவது குறுக்கு சாலை என்று மஞ்சள் நிறத்தில் இருந்த கான்க்ரீட் போர்டை தாண்டி மெதுவாக பைக்கை ஓட்டினான்.
சாலையின் இரண்டுப் பக்கமும் பெரிய பெரிய வீடுகள் இருந்தன. வசதியானவர்கள் வாழும் பகுதி போலும்!
ஆங்காங்கே சாலையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு இடத்தில மட்டும் சில சிறுவர்கள் கும்பலாக நின்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.