“இதுவும் நான் தான் சொல்லி தரணுமா? இந்த லெக்சரர் மேடம் இந்த சப்ஜெக்ட்டில் ரொம்ப வீக் போல இருக்கே...” என்ற விவேக், சொன்னதுப் போல மனைவிக்கு காதலை செய்கையில் காண்பிப்பது எப்படி என சொல்லியும் கொடுத்தான்!!!
ஏற்கனவே விவேக்கின் பேச்சிலும், செய்கைகளிலும்... அதில் தெரிந்த காதலிலும், பரிவிலும் மனம் நெகிழ்ந்து இருந்த பாரதி, அவனை தடுக்க எந்த முயற்சியும் செய்யாது முழு மனதுடன் அவனுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினாள்!!
🌼🌸❀✿🌷
பாரதி கண் விழித்தப் போது நேரம் இருட்ட தொடங்கி இருந்தது. அவசரமாக எழுந்தவளை விவேக்கின் கைகள் தடுத்தது.
“ப்ளீஸ் விவேக்... இருட்டிடுச்சு... பாவம் பவி தனியா வேலை செஞ்சுட்டு இருப்பா. நான் போய் அவளுக்கு ஹெல்ப் செய்றேன்...” என்றாள் பாரதி கொஞ்சலாக.
விவேக்கின் கைகள் இன்னும் அழுத்தமாக அவளின் மேலே படர்ந்தது...
கோபப் படாமல், அவனின் குறும்பை ரசித்து புன்னகைத்துக் கொண்டே,
“ப்ளீஸ்... விவேக்...” என்றாள் பாரதி!
பாதிக் கண்களை திறந்துப் பார்த்த விவேக்,
“சரி, லஞ்சம் ஏதாவது கொடு...” என்றான்!
“லஞ்சமா?”
அவன் கன்னத்தில் கை வைத்து காட்ட... அவனின் கன்னத்தில் செல்லமாக ஒரு அடி கொடுத்து அவனை அதிர வைத்தாள் பாரதி... அந்த அதிர்ச்சியில் இருந்து விவேக் வெளிவரும்