(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

சின்ன திட்டுக்கள் கேட்கவும் வைத்தான்.

  

பாரதியின் இயல்புக்கு அவளுக்கு கோபம் வரத் தான் செய்தது... ஆனால், விவேக்கின் அன்பில் தன்னை மறந்திருந்ததால், பாரதி கற்பகத்தின் திட்டுக்களை பெரிதாக கண்டுக்கொள்ளாமல் இருந்தாள்.

   

விவேக் மட்டும் அல்லாமல் உமாவும் பாரதிக்கு துணையாகவே இருந்தாள்.

  

பாரதிக்கு நேரடியாக தெரியாத இன்னுமொரு சப்போர்ட்டும் அவளுக்கு இருந்தது. அது தான் நரேந்திரனின் துணை... நரேந்திரன் கற்பகத்தை விரும்பி மணந்துக் கொண்டவர். அவருக்கு எப்போதுமே மனைவி சொல்லே வேதவாக்கு. மனைவி தவறாக எதையும் செய்தால் கூட அவளை தாங்குபவர் அவர். ஆனால், மனைவியுடன் தனியாக இருக்கும் போது மறக்காது அவளின் தவறை சுட்டிக் காட்டவும் செய்வார். வீட்டில் நடப்பவற்றை கண்டும் காணாதது போல் பார்த்திருந்த நரேந்திரன், கற்பகத்திடம், அவள் பாரதியிடம் கடுமையாக நடப்பது தவறு என்பதை எடுத்து உரைத்தார்.

  

புதுசா கல்யாணம் ஆனவங்க கண்ணம்மா... வேலை இருப்பதால் ஹனிமூன் கூட போகாமல் இருக்காங்க... நீ இப்படி சின்ன விஷயத்திற்கு எல்லாம் அந்த சின்ன பொண்ணு கிட்ட கோபப் படுவது தப்பு... விவேக் எந்த வேலையாவது செய்யாமல் விட்டானா என்ன? உன் பொஸஸிவ்னஸ் கொஞ்சம் குறைத்துக் கொள்... பாரதி விவேக்கை உன்னிடம் இருந்து பிரிக்க மாட்டாள்...“

  

கற்பகத்திற்கு கணவன் சொல்வது புரியாமல் இல்லை...

   

நான் எப்போதும் அவளை திட்டுறது இல்லை நரேன்... சில சமயம் கோபம் வருது...” என்றாள் அவள்!

  

அதுவும் சரி தான்... ஒரு சில சமயங்கள் அன்பொழுக மருமகளை கவனித்துக் கொள்ளும் கற்பகம், ஒரு சில சமயங்கள் சின்ன சின்ன விஷயத்திற்கும் அவளை கடிந்துக் கொண்டாள்.

   

இப்படி மிகப் பெரிய "டிராமா" எதுவும் இல்லாமல் ஒன்றரை வாரக் காலம் வேகமாக ஓடிப்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.