(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

போனது. பாரதியின் கல்லூரி திறக்கும் நாளும் வந்தது!

  

பவித்ரா செல்ஃபோனில் அழைத்து நினைவுப் படுத்தும் வரை கல்லூரி பற்றிய எண்ணமே இல்லாமல் மறந்திருந்த பாரதி, முதல் முதலாக காலையில் எழுந்து கல்லூரிக்கு கிளம்பி செல்ல வேண்டுமே என்று அலுப்புற்றாள். 

  

அலுவலகத்தில் இருந்து திரும்பிய விவேக், அவனின் மனைவி கட்டிலில் அமர்ந்து ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான்.

  

ஹேய் ரதி! என்ன டா யோசனை?” என உடனே அவளிடம் விசாரித்தான்.

  

விவேக்கின் கேள்வியில் சிந்தனை கலைந்த பாரதி, அவசரமாக அருகே இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தாள். மணி ஐந்தை தாண்டி இருந்தது.

  

பயப் படாதீங்க மேடம் ஜி... இன்னைக்கு ஆஃபீஸ் டைம் முடிஞ்ச பிறகு தான் கிளம்பினேன்...” என்று சொல்லிக் கொண்டே அவளருகே உரசிக் கொண்டே அமர்ந்தவன்,

  

இந்த வீகென்ட் என்ன செய்யலாம் சொல்லு ரதி? சினிமா போகலாமா? ஏதாவது ரிசார்ட் போகலாமா?” என்றான்.

  

ப்ச்... இந்த வாரம் வேண்டாங்க... வேற வேலை இருக்கு...” என்றாள் பாரதி அலுப்புடன்.

  

அப்படி என்ன எனக்கு தெரியாத புது வேலை?”

  

சற்றே நகர்ந்து, கணவனின் தோளில் தலை சாய்த்துக் கொண்ட பாரதி,

  

ஹனிமூன் பீரியட் ஓவர் விவேக்... மன்டே காலேஜ் ரீ ஒபன் ஆகுது... எனக்கு ஞாபகமே இல்லை... பவி ஃபோன் செய்தா... இனி மேல் தான் நான் எல்லாம் எடுத்து வைக்கனும்... ஹாஸ்டல்ல இருந்து எடுத்து வந்த புக்ஸ் எல்லாம் எங்கே இருக்குனு கூட ஞாபகம் இல்லை...” என்றாள்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.