தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
23. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
"என்ன, இரண்டுப் பேரும் இப்படி ஒரு சர்ப்ரைஸ் லுக் கொடுக்குறீங்க?? என இந்துவே அவர்களிடம் கேட்டாள்.
"இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கலை இந்து... அப்படி என்ன யோசிக்க போற?" எனக் கேட்டாள் வீணா.
"யோசிக்க நிறைய இருக்கு வீணா... அம்மாவைப் பத்தி... கீதா அக்கா பத்தி... காஞ்சனா ஆன்ட்டி பத்தி... அக்கா சொன்ன அந்த கண்மணியைப் பத்தி.... யோசிக்க எவ்வளவோ விஷயம் இருக்கு... எதையும் எடுத்தேன் கவிழ்தேன்னு செய்ய முடியாது தானே.... பொறுமையா தான் முடிவு செய்யனும்... அதும் இந்த விஷயத்துல, ஹுஹும்..."
சரி தான் என தலை ஆட்டிய வீணா, இந்து தன் செல் ஃபோனை கையில் வைத்திருப்பதை கவனித்து விட்டு,
"எப்பவும் ஃபோனை பேக்ல தானே வச்சிருப்ப இப்போ என்ன?" என்று விசாரித்தாள்.
"வர வழியிலே ஒரு ஹெல்ப் பண்ணினேன்னு சொன்னேன் இல்லையா... அங்க ஒரு பொண்ணுக்கு என் ஃபோனை கொடுத்தேன்... அப்போ எடுத்தது அப்படியே கையிலேயே வச்சிருக்கேன்..."
இந்துவின் ஃபோனை வாங்கி நோண்டிய வீணா,
"நீ என்ன பாட்டு கேட்குறேன்னு பார்க்கிறேன்..." என்று சொல்லிக் கொண்டே பார்த்தாள்...
"சூப்பர்... என்ன இந்து ஒரே ரொமான்டிக் சாங்க்ஸா இருக்கு????"
"ப்ச்... என்ன வீணா நீ... எப்போவும் நான் வச்சுருக்கிற கலெக்ஷன் தான் அது..." என்று இந்து மறுக்க,
"இங்க பாருங்க கீதா க்கா... நீங்களே சொல்லுங்க... 'முன்பே வா என் அன்பே வா....',