கீதாவும் இந்துவும் மயக்கம் படாத குறை தான். பொதுவாக வீணா படிப்பு, வேலை என எதிலும் பெரிதாக அக்கறை காட்டியதில்லை.
அவர்களின் திகைப்பை புரிந்துக் கொண்டு, வீணாவே பேசினாள்,
"முன்னாடி எனக்கு இந்த மாதிரி எல்லாம் வேலைல ஆர்வம் இல்லை தான்... ஆனால் இப்போ அத்தைக் கிட்ட பேசி பழகின பிறகு எல்லாமே மாறி போச்சு... எனக்கும் ஏதாவது வேலைக்கு போகனும்ன்னு ஆசையா இருக்கு... இந்து உன்..." என தயக்கத்துடன் வீணா பேசிக் கொண்டிருக்கும் போதே,
"வாவ் வீணா... லக்ஷ்மி ஆன்ட்டி கலக்குறாங்க.... நீ என் கிட்ட கேட்க இவ்வளவு யோசிக்கனுமா? கன்ஸிடர் இட் டன்!" என்றாள் இந்து.
"தேங்க்ஸ் இந்து... எனக்கு நம்ம ஃபிரெண்ட்ஷிப் பேர்ல நீ எந்த வேலையும் தர வேண்டாம்... சாதாரணமா ஒரு ஃபிரெஷருக்கு (fresher) தர மாதிரி வேலை கொடுத்தா போதும்...."
"இல்லை வீணா... நீ ஏன் அங்க வேலை செய்யனும்... நாம முன்னாடி பிளான் செஞ்ச மாதிரி தனியா ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணுவோம்... நீ அதை கவனிச்சுக்கோ நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்..."
"நல்லா ஐடியா தான் இந்து," என்று கீதாவும் ஆமோதித்தாள்.
"நானா?? என்னால முடியுமா???"
"என்ன வீணா நீ இப்படி கேட்குற?? உனக்கு சந்தேகமே வேண்டாம்.. அப்படி ஏதாவது தேவைன்னா கூட நமக்கு ஹெல்ப் செய்ய கீதா அக்கா இருக்காங்க, வேற என்ன வேணும்????"
வீணா சரி என தலை அசைக்கவும்.
"நம்ம பழைய பிசினஸ் பிளானை கொஞ்சம் மாத்திட்டு வரேன்... நாம டிஸ்கஸ் பண்ணி