(Reading time: 7 - 14 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

அனுப்பின மெசேஜ நீ படிக்குறது தப்பு... எப்போவுமே ஒரு பிரைவேட் ஸ்பேஸ் இருக்கனும்... " என்றாள்.

  

"சாரி இந்து... ஆனால் கீதா அக்கா... இந்து இன்னும் சஞ்சீவுக்கும் அவளுக்கும் நடுவில எதுவும் இருக்குன்னு ஒத்துக்கலை தானே? அப்புறம் மெசேஜை நான் படிச்சா என்ன??"

  

"இந்து தெளிவா யெஸ்'ன்னு சொல்லலை தான்... ஆனால், நாம கேட்டப்போ நோ'ன்னும் சொல்லலை தானே?"

  

"அட ஆமாம்...!!! கரக்ட்டா தான் சொல்றீங்க...! ஆனாலும் இந்து, அது என்ன அது எ மி பி அ???? தெரியலைனா எனக்கு தலையே வெடிச்சிடுமே??"

  

"தெரியலை வீணா... அந்த நந்தினி லூசு அப்போ தான் ஏதோ கேட்டிச்சா.. நான் சஞ்சீவுக்கு ரிப்ளை அனுப்பலை.... எ மி பி அ என்னவா இருக்கும்???"

  

"அ அழகானன்னு நினைக்கிறேன்... அப்போ அழகான ராட்சஸின்னு வரும்... எ மி பி??? ஹுஹும் தெரியலை... என்னன்னு சஞ்சீவ் தான் சொல்லனும்..." என்றாள் கீதா.

  

அவர்கள் ஆர்டர் செய்த உணவுகளை சர்வர் அந்த நேரத்தில் எடுத்து வரவும், மூவரும் பேசியபடி உண்ண தொடங்கினார்கள்.

  

"வீணா, நீ இப்படி ரோஷினியை விட்டுட்டு வரதை மத்தவங்க பார்த்தால், நீ குழந்தையை மறந்துட்டு ஷாப்பிங் வந்துருக்கேன்னு தானே பேசுவாங்க...??"

  

"பேசினால் பேசட்டும்... வீட்டில இருந்தாலும் ரோஷினி அவங்க பாட்டி கூட தான் விளையாடிட்டு இருப்பா.... அவ இன்னும் சின்னக் கைக் குழந்தை இல்லையே... அதுவும் இல்லாமல், அத்தைக்கு அவளோட விளையாடுறது ரொம்ப பிடிக்கும் அதனால நானும் ரொம்ப தலையிடுறதில்லை... அப்புறம்..... இந்து நானே உன்கிட்ட கேட்கனும்னு தான் இருந்தேன்... வர வர வீட்டில சும்மா இருந்து போர் அடிக்குது... ஏதாவது வெளியே போய் வேலை செய்யலாமான்னு யோசிக்கிறேன்..."

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.