'சிநேகிதனே, சிநேகிதனே ரகசிய சிநேகிதனே...', அப்புறம் 'வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில்'... ம்ம்ம்ம்..." என்று விடாமல் சொன்னாள் வீணா.
"இது எல்லாம் எனக்கு முன்னாடியே பிடிச்ச பாட்டு தான்... உனக்கு தெரியாதா என்ன?" என்று இந்துவும் விடாது கேட்க,
"தெரியும்... ஆனால் ரீசன்ட் லிஸ்ட்ல இது எல்லாம் வர வேண்டிய அவசியம் என்ன...??" என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் வீணா.
"வீணா... போதும் நிறுத்து... வர வர உன் இம்சை தாங்க முடியலை..." என்று இந்து அலுத்துக் கொள்ள,
"ஏன் வீணா இப்படி, பாவம் இந்து... " என்று கீதாவும் பரிந்துரைக்கவும்,
"சரி போகட்டும்... " என்று விட்டாள் வீணா. ஆனாலும் தொடர்ந்து இந்துவின் ஃபோனை கொடுக்காமல் நோண்டியவள்,
"இது தானா உனக்கு இன்னைக்கு மீட்டிங் டைம்ல வந்த மெசேஜ்???? சஞ்சீவ் தான் அனுப்பினாரா???" எனவும்,
இந்து திகைத்துப் போய் தோழியின் கையில் இருந்த ஃபோனை வாங்க முயன்றாள். அவளுக்கு எட்டாதவாறு ஃபோனை மேலே பிடித்து படித்தாள் வீணா.
'ok found a name for you... ye mi pi a ratchasi'
"ஹாங்!!! என்ன இது??? ராட்சஸி சரி... அது என்ன எ மி பி அ ராட்சஸி...???"
செல்லமாக வீணாவின் தலையில் கொட்டி விட்டு, ஃபோனை வாங்கி இந்துவிடம் கொடுத்த கீதா,
"வீணா, இது தப்பு... நாம மூணு பேரும் ஃபிரெண்ட்ஸ் தான்... ஆனால் சஞ்சீவ் இந்துக்கு