முடிவு எடுக்கலாம்..." என்றாள் இந்து ஆர்வத்துடன்.
சரி என அவளிடம் சொல்லி விட்டு, கீதா பக்கம் திரும்பிய வீணா,
"அக்கா, உங்களுக்கு இதுல வருத்தம் எதுவும் இல்லையே????" என்றாள்.
"ச்சே... என்ன வீணா கேள்வி இது... எனக்கு வருத்தம் எல்லாம் இல்லை... என் வீட்டிலயும் அத்தை சீக்கிரம் புரிஞ்சிப்பாங்க..." என்றாள் கீதா நம்பிக்கையுடன்.
🌼🌸❀✿🌷
வீணா, கீதா மற்றும் இந்துவை அவரவர் வீட்டில் விட்டு விட்டு, தன் வீடு செல்வது என்பது அவர்களின் திட்டம். அது போல் முதலில் இந்துவின் வீட்டிற்கு மூவரும் வந்தார்கள்.
அர்ச்சனாவிடம் பேசி நிறைய நாட்கள் ஆகி விட்டதாக கீதா சொல்லவும், சிறிது நேரம் அர்ச்சனாவுடன் பேச இந்துவுடன் கீதா வீணாவும் கூட வந்தார்கள். ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த அர்ச்சனா தோழிகள் மூவரையும் அன்புடன் வரவேற்றார். பின் வீணாவிடம், லக்ஷ்மி பற்றியும், குழந்தைப் பற்றியும் விசாரித்து விட்டு கீதாவிடம் திரும்பினார்.
"என்ன கீதா, ராஜீவுக்கு இன்னும் உன்னை ஒரு குழந்தையோடு ஷேர் பண்ண மனசு வரலையா என்ன?"
"அப்படி கேளுங்க ஆன்ட்டி! நாங்க கேட்டா பதிலே சொல்ல மாட்டேங்குறாங்க" என வீணாவும் அர்ச்சனாவுடம் சேர்ந்து ஒத்து ஊதினாள்.
ஏற்கனவே அர்ச்சனாவின் கேள்வியினால் எழுந்த வெட்கத்தில் சிவந்திருந்த கீதாவின் முகம் மேலும் சிவந்தது. அவளுக்கு உதவ நினைத்து இந்து பேசினாள்,
"அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்கும் அவசரம்? இன்னும் அவங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் கூட ஆகலை... குழந்தை எல்லாம் அவங்களே யோசிச்சு பொறுமையா பெத்துப்பாங்க... சும்மா சும்மா இதையே கேட்காதீங்க..."