தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
24. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சஞ்சீவுடன் பீச்சிற்கு போக தயாராக தொடங்கிய இந்து, என்ன உடை அணிந்து செல்வது என்று யோசித்தாள்... சேலை கட்ட தோன்றிய ஆவலை கஷ்டப்பட்டு அடக்கினாள்... அன்று சேலை அணித்து சென்றால் சஞ்சீவ் சொன்னதற்காக செய்ததுப் போல இருக்கும்... அவளுக்கு அது சரியாகப் படவில்லை... அதற்கு எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் என்று அவளுக்கு தோன்றியது...
வேறு என்ன என்ற குழப்பத்துடன் அவள் இருக்க, அவளின் குழப்பத்தை தீர்ப்பது போல் அந்த நேரத்தில் வீணா அவளை செல் ஃபோனில் அழைத்தாள்.
எப்போதும் போல இந்துவை சஞ்சீவுடன் இணைத்து கேலி செய்தாலும், வீணா இந்துவிற்கு உதவவும் செய்தாள். சேலை வேண்டாம் என்று இந்து ஏற்கனவே முடிவு செய்திருந்ததால், தோழிகள் இருவருமாக ஆலோசித்து வெஸ்டர்ன் உடையை விட சுடிதார் இலகுவாக இருக்கும் என்ற முடிவிற்கு வந்தார்கள்... அடுத்து, எந்த சுரிதார் அணிவது என்ற கேள்வி வரவும், இருவரும் இந்துவிடம் இருக்கும் பல பல உடைகளை பட்டியலிட்டு யோசித்தார்கள். இறுதியில் இந்துவின் பிறந்தநாளுக்கு வாங்கிய பேபி பிங்க் கலர் சுரிதார் என முடிவு செய்தார்கள்...
வீணாவிற்கு நன்றி சொல்லி அழைப்பை துண்டித்தாள் இந்து... பின் அவர்கள் தேர்வு செய்த பேபி பிங்க் கலர் சுடிதாரை அணித்து, தன் நீண்ட கூந்தலை சற்றே தூக்கி வாரி பின்னி முடித்தப் போது, தான் அழகாக இருப்பதாக இந்துவிற்கே கூட தோன்றியது!!
சொன்னது போல் சரியாக நான்கு மணிக்கு அவளை அழைத்து செல்ல வந்த சஞ்சீவின் கண்கள் இந்துவை பார்த்ததும் பாராட்டுடன் விரிந்தது...
அதை கவனித்ததும், அன்று அலங்கரிக்க எடுத்துக் கொண்ட சிறிது 'எக்ஸ்ட்ரா' நேரத்திற்கு கிடைத்த பரிசாக இந்துவின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது!
அர்ச்சனா அப்போது வீட்டில் இல்லை... அதனால் கனகாவிடம் மட்டும் சொல்லி விட்டு சஞ்சீவுடன் கிளம்பினாள் இந்து.