(Reading time: 9 - 17 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"பொதுவா யூத்துக்கு பிடிச்ச மாதிரி அம்மா அப்பான்னு சொல்வாங்களே... அதே மாதிரி மருமகளுக்கு பிடிச்ச மாமியார்னு வச்சுக்கோங்க... சின்ன வயசில லக்ஷ்மி ஆன்ட்டி குடும்பத்தில கொஞ்சம் பணத்துக்கு கஷ்டம் தான்.... அவங்க ரொம்பவே கஷ்டப் பட்டிருக்காங்க.. அதனால அவங்களால அவங்களுக்கு பிடிச்ச படிப்பை கூட முடிக்க முடியலை.... அம்மா ஹெல்ப் பண்றேன்னு சொன்னாலும் அவங்க ஒத்துக்கலை.. ஒருநாள் எங்க வீட்டு ஃபங்க்ஷன்ல அவங்களைப் பார்த்து பிடிச்சு போய் அசோக் அங்கிள் அவங்களை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டார்... அங்கிள் ரொம்ப முற்போக்கான எண்ணம் கொண்டவர்... கல்யாணத்துக்கு அப்புறம் அவருக்கு நிகரா மனைவிக்கும் கம்பெனியில பதவி கொடுத்து அவங்களுக்கு நிர்வாகம் பத்தி எல்லாம் சொல்லி கொடுத்தார்... ஆன்ட்டிக்கும் அதில் இண்டரெஸ்ட் இருந்ததாலே சீக்கிரமா எல்லாம் கத்துக் கிட்டாங்க... அங்கிள் இறந்தப் பிறகு ஆன்ட்டி தான் தனியா அவங்க கம்பனியை பார்த்துக்கிட்டாங்க... நடுவில வந்த பிரச்சனை எல்லாத்தையும் தனியாவே நின்னு சமாளிச்சாங்க...
இப்பவும் கூட அவினாஷுக்கும், வீணாக்கும் சுதத்திரம் கொடுப்பதிலயா இருக்கட்டும்... அட்வைஸ் பண்றதிலையா இருக்கட்டும்... அவங்களுக்கு நிகர் அவங்க தான்...!!! ரொம்ப மாடர்ன் மாமியார்னு வச்சுக்கோங்க...வீணாக்கு பொதுவா இந்த படிப்பு, கரியர் (career) இதில எல்லாம் அவ்வளவு இண்டரெஸ்ட் இல்லை... ஆனால், அவளே இப்போ புதுசா பிஸ்னஸ் தொடங்குறதைப் பத்தி பேசுறான்னா, எல்லாம் ஆன்ட்டியோட இன்ஃப்ளுயென்ஸ் தான்.... அவங்களுக்கு வீணா ஒரு மகள் மாதிரி... வீணாக்கும் அவங்க அம்மா மாதிரி தான்... வீணாவோட அம்மாவே சொல்வாங்க லக்ஷ்மி ஆன்ட்டி தான் வீணாவோட அம்மா மாதிரி தோணுதுன்னு..."

  

"ஒரே பையன் இருக்கிற வீட்டில அம்மா இப்படி இருக்கிறது ரொம்பவே அதிசயம் தான்... வாவ்..." என்ற சஞ்சீவ், சிறிது இடைவெளிக் கொடுத்து, அவனே தொடர்ந்தான்.

  

"இந்து, உங்களுக்கும் அண்ணிக்கும் அவினாஷ் வீணா லவ் விஷயம் தெரியுமா?"

  

"தெரியாமல் எப்படி... எங்க ஃபிரென்ட்ஸ் பெர்மிஷன் இல்லாமல் யாரும் பேச முடியாது தெரியுமா???" என்றாள் இந்து!

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.