தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 01 - சசிரேகா
முன்னுரை
திருமணம் ஆனதும் பெண்கள் தன் குடும்பத்தை விடுத்து கணவன் வீட்டிற்கு மருமகளாக செல்கிறாள் அதுவே ஒரு ஆண் திருமணம் ஆனதும் தன் குடும்பத்தை விடுத்து மனைவியின் வீட்டிற்கு மருமகனாக சென்றால் என்னாகும் என்பதே இக்கதையாகும்.
பாகம் 1
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்
”அப்பா எனக்கு கல்யாணமே வேணாம்பா ப்ளீஸ்பா” என கண்ணீர் விட்டு கைகூப்பி தன் தந்தையிடம் கெஞ்சினாள் காவேரி ஆனால் அவளின் தந்தை சண்முகமோ அவளுக்கு மேல் கண்களில் கண்ணீருடன் கைகூப்பி தன் மகளிடம் கெஞ்சினார்
”அம்மாடி, அப்படி சொல்லாதம்மா என்னோட மானம் மரியாதையெல்லாம் இந்த கல்யாணத்திலதான் இருக்குது, நீ கல்யாணமே வேணாம்னு சொன்னா அப்புறம் நம்ம குடும்ப மானம் போயிடும், எனக்காகவாவது நீ இந்தக் கல்யாணத்தை செய்துக்கம்மா”
”எப்படிப்பா எல்லா விவரமும் தெரிஞ்சிருந்தும் என் மனசு புரிஞ்சிருந்தும் இப்படி சுயநலமா யோசிக்க முடியுது உங்களால“
”என்ன செய்றதும்மா சில சமயம் காரியம் ஆகனும்னா சுயநலமா இருக்கறது தப்பில்லையே”
”அப்பா உங்களைக் கெஞ்சி கேட்கறேன், உங்க மேல இருக்கற மரியாதையாலதான் நான் இன்னும் ஓடிப்போகலை, அந்த காரியத்தையும் என்னை செய்ய வைச்சிடாதீங்கப்பா, உடனே இந்த கல்யாணத்தை நிப்பாட்டுங்கப்பா”
”நீ என்னோட பொண்ணு, நம்ம குடும்பத்துக்கு களங்கம் வர்ற மாதிரி எந்த ஒரு