(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

பையன் இருக்கறப்ப எதுக்காக இவ்ளோ தொலைவில மாப்பிள்ளையை பார்த்து கல்யாணத்தை அவசர அவசரமா நடத்தறியே இது உனக்கே தப்புன்னு தெரியலை”

  

”சரி எது தப்பு எதுன்னு பார்க்கற நிலைமையில நான் இப்ப இல்லை, முகூர்த்தம் நேரம் வந்துடுச்சி இன்னும் கொஞ்ச நேரத்தில கல்யாணம் ஆகப் போகுது, அதுக்கு தடையா நீங்க இருக்க கூடாது முதல்ல கிளம்புங்க”

  

”அதுசரி கொம்பனுக்கு பொண்ணு தர பயந்துக்கிட்டு இவ்ளோ தூரம் நீ போவேன்னு நான் எதிர்பார்க்கலை ஆவட்டும் இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நாங்களும் பார்க்கிறோம்”

  

”அடப்பாவிங்களா நீங்களும் பொண்ணை பெத்தவங்கதானே, என் பொண்ணு கல்யாணத்தில வந்து ஏன்யா தகராறு செய்றீங்க”

  

”நாங்க ஒண்ணும் தகராறு செய்யலை நியாயத்தை சொல்ல வந்தோம், காவேரிக்கு கொம்பன் இருக்கறப்ப எதுக்காக நீ வேற மாப்பிள்ளையை பார்க்கற”

  

”கொம்பனா அவனுக்கெல்லாம் என் பொண்ணை நான் தர்றதாயில்லை”

  

”ஏன் கொம்பனுக்கு என்ன குறைச்சல், ஊருக்கே அவன் சாமி, அவன் பார்வையில இருந்து தப்பானவன் ஒருத்தன் கூட தப்பிக்க முடியாது, ஊருக்குன்னு வந்தா தானாவே நல்லது கெட்டது எடுத்து செய்றவன், அவனால எத்தனை குடும்பங்கள் நல்லபடியா வாழ்ந்துக்கிட்டு இருக்குது, அப்பேர்ப்பட்டவனை போய் நீ வேணாம்னு சொல்றியே உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா“

  

”ஆமாம்யா எனக்கு கிறுக்குதான் பிடிச்சிருக்கு ஊருக்கு நல்லது செய்ற கொம்பன் என் குடும்பத்துக்கு கெடுதலாதானே வந்து நிக்கறான்”

  

”என்னப்பா இப்படி பேசற கொம்பனாவது உன் குடும்பத்துக்கு கெடுதல் நினைக்கறதாவது”

  

”பின்ன என் பொண்ணு கல்யாணத்தை 6 முறை நிப்பாட்டினது யாரு அவன்தானே”

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.