”என்னை மன்னிச்சிடுங்க, என்னால கொம்பன் அண்ணனுக்கு துரோகம் இழைக்க முடியாது, அவரோட முறைப்பொண்ணை கல்யாணம் செய்துக்க என்னால முடியாது, என்னை விட்டுடுங்க” என சொல்லிவிட்டு தன் தாய் தந்தையை அழைத்துக் கொண்டு அக்கணமே அங்கிருந்து சென்றுவிட சண்முகத்திற்கு தலையே சுழன்றது, நடந்த விசயத்தை அறிந்த காவேரிக்கு கண்ணீரும் விரக்தியும் வந்தது, இதற்குதானே கல்யாணத்தை நிப்பாட்ட சொன்னாள். இப்போது தந்தையின் நிலைமையைக் கண்டு அவளுக்கு பயமே வந்தது, சற்று முன் தந்தை சொன்ன விசயம் அவளின் அடிமனதில் வந்து நின்றது.
”இந்த முறை நிச்சயம் உன் கல்யாணம் நடக்கும், நடக்கலைன்னா உன் அப்பன் செத்ததுக்கு சமம்” என சண்முகம் பேசியது காவேரிக்கு நினைவுக்கு வரவும் உதறல் எடுத்தது. எங்கே தன் தந்தை தவறான முடிவு எடுப்பாரோ என்ற எண்ணத்தில் பயத்துடன் சண்முகத்தை நாடினாள், அவரோ விரக்தியில் இருந்தார், சோர்வாக இருந்தார், கல்யாணம் நின்றது கேள்விப்பட்டதும் திருமணத்திற்கு வந்திருந்த மக்கள் கூட கலைந்து சென்றார்கள், அவ்விடமே காலியாகிவிட்டது, சண்முகம் அவரின் மகள் காவேரி மட்டுமே இருந்தார்கள். காவேரியும் தன் தந்தையின் நிலைமையை எண்ணி அழுதபடி இருந்தாள், சண்முகமோ தன் மகளையே கலங்கிய கண்களுடன் பார்த்தபடி
”உனக்கு ஒரு நல்லது செய்ய நினைச்சேன், கடைசி வரைக்கும் அது நடக்காமலே போயிடுச்சேம்மா, நான் பாவிம்மா நான் பாவி என்னை மன்னிச்சிடும்மா” என கைகூப்பி மன்னிப்பு கேட்க காவேரி துடித்துப் போனாள்
”அப்பா போதும்பா இப்படியெல்லாம் பேசி என்னை பாவியாக்கிடாதீங்க, கல்யாணம் நின்னா என்ன நின்னுட்டுப் போகுது, இதுக்காக இப்படி நீங்க உடைஞ்சிப் போகலாமா வாங்கப்பா கிளம்பலாம் வாங்க” என சொல்ல அவரோ அவளை ஏற இறங்கப் பார்த்தார், மணமகள் அலங்காரத்தில் கண்கள் கலங்கியபடி இருந்தவளைக் கண்டு கோபமுற்றார்
”தங்க சிலையாட்டம் இருக்கற உன்னை எப்படி நான் அந்த கொம்பனுக்கு கட்டிவைப்பேன், இதைச் சொன்னா ஒருத்தனும் ஒத்துக்க மாட்டேங்கறாங்க, அந்த கொம்பன் கெட்டவனா இருந்திருந்தா கூட பரவாயில்லை ஊருக்கே நல்லது செய்து உனக்கு கெடுதல் செய்றானே