(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அட நிறுத்துப்பா கொம்பன் என்னிக்கு கல்யாணத்தை நிப்பாட்டினான், கல்யாணம் தன்னாலதானே நின்னது”

  

”தன்னால இல்லை உங்களை போல ஊர்க்காரங்களால”

  

”என்ன செய்றது கொம்பனுக்கு ஒரு நல்லது செய்யனும்னு நினைச்சோம் அது தப்பா”

  

”அதுக்கு என் பொண்ணுதான் கிடைச்சாளா“

  

”பின்ன அவள்தானே கொம்பனோட முறைப்பொண்ணு, என்னிக்கு இருந்தாலும் கொம்பன்தான் உன் மாப்பிள்ளை அதை நீ மறந்துடாத”

  

”முடியாது இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என அலறினார் சண்முகம்.

  

இவர்களின் உரையாடலை கேட்டபடி இருந்த மாப்பிள்ளை வீட்டாருக்கு குழப்பம் வந்தது, அவர்களே சண்முகத்திடம் வந்து பேசினார்கள்

  

”சம்பந்தி இங்க என்னதான் நடக்குது, இவங்க யாரைப் பத்தி பேசறாங்க ஆமா கொம்பங்கறது”

  

”அய்யோ இல்லை இல்லை அவனை பத்தி பேச வேணாம், அதை விட்டுத்தள்ளுங்க, முகூர்த்தத்துக்கு நேரமாச்சி, வாங்க மாப்பிள்ளை வாங்க மணமேடைக்கு போகலாம் வாங்க” என சொல்ல அவர் பார்த்து வைத்த மாப்பிள்ளையே வர மறுத்தான்

  

”பொறுங்க முதல்ல எனக்கு சில விசயம் தெரியனும், நீங்க எந்த கொம்பனை பத்தி பேசறீங்க ராஜபாளையம் கொம்பனை பத்தியா” என கேட்டதும் அரண்டேப் போனார் சண்முகம்

  

”மாப்பிள்ளை உங்களுக்கு எப்படி அவனைப் பத்தி தெரியும்”

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.