(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”ஏன்மா காவேரி நான் ஒரு கேள்வி கேட்பேன், அதுக்கு நீ பதில் சொல்லு” என கேட்க அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது

  

“கேளுங்க அண்ணா”

  

”என்னிக்காவது நீ கொம்பனை ஒரு முறையாவது பார்த்திருக்கியா” என கேட்க அவளோ வியந்தாள். ஒரு முறை கூட அவள் கொம்பனை பார்த்தது கிடையாது, அவனது பேரையும் அவனது நல்ல செயல்களையும் மட்டுமே காதால் கேட்டிருந்தாள். டிரைவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள், டிரைவரோ நக்கலாக சிரிக்க அதைக் கண்டவளுக்கு கோபமே எழுந்தது

  

”அண்ணா நக்கலா”

  

”பின்ன என்னம்மா கொம்பனுக்கு மனைவியாக எத்தனை பேர் ஆசைப்படறாங்க தெரியுமா, பொண்ணை பெத்தவங்க எல்லாருமே கொம்பனை அவங்க வீட்டு மாப்பிள்ளையாக்க போட்டி போடறாங்க, உரிமையில்லாதவங்களே கொம்பனுக்காக உரிமை பாராட்டறப்ப உரிமையிருந்தும் உறவு இருந்தும் இப்படி நீங்க தள்ளி போறது நினைச்சா வேடிக்கையா இருக்கு, கொம்பன் என்ன கெட்டவரா, அயோக்கியனா, சுத்தமான தங்கம், அவரு கிடைக்க நானா நீயான்னு பொண்ணுங்க போட்டி போடறப்ப, நீ என்னடான்னா அவரை ஒரு முறை கூட பாராமலே இருக்க, நீ மட்டும் அவரை ஒரு முறை பார்த்தேன்னு வையேன், கட்டினா கொம்பனைதான் கட்டுவேன்னு ஊர் புள்ளைங்க ஒத்தகால்ல நிக்கற மாதிரி நீயும் நிப்ப” என சொல்ல அவளின் கோபம் குறைந்து இதழில் புன்னகையை தவழவிட்டாள்

  

”என்னம்மா இப்ப நீ நக்கலா சிரிக்கறியே, நான் சொன்னது உனக்கு கேலியா இருக்கா”

  

”சே சே அப்படியில்லை உங்ககிட்ட நான் ஒரு கேள்வி கேட்கவா அண்ணா”

  

”கேளும்மா எதை பத்தி கொம்பனை பத்திதானே, இவ்ளோ தூரம் நான் சொன்ன பின்னாடி உனக்கும் கொம்பனை பத்தி தெரிஞ்சிக்கனும்ங்கற ஆசையிருக்காதா என்ன கேளு கேளு”

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.