(Reading time: 9 - 17 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

சஞ்சீவ்.

  

"அட்வைஸ் தான்... ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை... கீதாக்கா பொதுவா தான் சொன்னாங்க... ரொம்ப இருட்டுற வரைக்கும் இருக்க வேண்டாம்... ரொம்ப லோன்லியா இருக்கிற இடத்துக்கு போக வேண்டாம் எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாம் சொன்னாங்க.... நம்ம நல்லதுக்கு தானே சொல்றாங்க... அதைக் கேட்குறதுல தப்பு இல்லை தானே...??"

  

"தப்புன்னு சொல்லலை... ஆனால், நாம ரெண்டுப் பேரும் சின்ன குழந்தைகளா என்ன? இதெல்லாம் நமக்கே தெரியாதா? எனக்கு பொதுவா இந்த மாதிரி அட்வைஸ் கேட்குறது சுத்தமா பிடிக்காது..."

  

"எனக்கும் பிடிக்கும்ன்னு இல்லை... ஆனால் அது யார் சொல்றாங்க என்பதை பொறுத்தது... அம்மா, கீதாக்கா, வீணா இவங்க யாராவது சொன்னால் கேட்பேன்... வேற யாரவது என்றால் எனக்கும் போர் தான் அடிக்கும்..."

  

சஞ்சீவின் கண்கள் இப்போது ஆச்சர்யத்துடன் இந்து பக்கம் வந்துப் போனது!

  

"எப்படி அது நீங்க மூணுப் பேரும் இவ்வளவு க்ளோஸ் ஃபிரெண்ட்ஸா இருக்கீங்க இந்து?? ஸ்கூல் டைம், காலேஜ் டைமில ஓகே... ஆனால் கல்யாணம் ஆன பின்னாலும் இப்படி எப்படி உங்க மூணு பேராலையும் ஃபிரெண்ட்ஷிப் மெயின்டைன் பண்ண முடியுது??? என்னோட ஸ்கூல் காலேஜ் ஃபிரெண்ட்ஸோட எனக்கு இப்போ அவ்வளவா டச் கூட இல்லை..."

  

"இதுல பெரிசா ரகசியம் எல்லாம் எதுவும் இல்லை சஞ்சீவ்... உண்மையா சொல்ல போனால் கொஞ்சம் லக்'ன்னும் சொல்லலாம்..."

  

"லக்கா?"

  

"ஆமாம்... சின்ன வயசில நாங்க ஃபிரெண்ட்ஸ் ஆனது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை... அப்புறம் ஸ்கூல் காலேஜ் கூட அப்படி தான்... ஆனால் அப்புறம்... கொஞ்சம் லக் தான்.... முதல்ல வீணாவை எடுத்துப்போம்... அவளோட அத்தை லக்ஷ்மி ஆன்ட்டியும் எங்க அம்மாவும் க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ்... லக்ஷ்மி ஆன்ட்டிக்கு எங்க மூணு பேரோட ஃபிரெண்ட்ஷிப் பத்தி

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.