“அருண் கிளாஸ் முடிஞ்சிடும் அபினவ்.”
“ப்ளீஸ், டூ மினிட்ஸ்.”
அஹல்யா அரை மனதுடன் சம்மதித்தாள்.
ஸ்கூட்டியில் சாய்ந்து அவள் நிற்க, அபினவ் சொன்னதுப் போலவே விரைவாக வந்தான்.
“இரண்டு நாளா நிறைய வேலை அஹல்யா. இன்னைக்கும் உங்களை மிஸ் செய்திடுவேனோன்னு நினைச்சுட்டே வந்தேன்!”
“ஊருக்குப் போனீங்களா?”
“போனேன். அப்பா கிட்ட பேசினேன். அக்கா கிட்டேயும் பேசினேன்.”
“உங்களை பார்த்து சந்தோஷப் பட்டிருப்பாங்களே?”
“அப்படி தான் நினைக்கிறேன். நான் என்ன பேசினேன்னு கேட்க மாட்டீங்களா?”
“சொல்லுங்க, என்ன பேசினீங்க?”
“உங்களைப் பத்தி தான் பேசினேன். அதாவது உங்களையும் அருணையும் பத்தி.”
“எ—ங்—க—ளை-யா?”
“ஆமாம் உங்களைப் பத்தி சொன்னேன். என்ன சொன்னாங்கன்னு நினைக்குறீங்க?”
அஹல்யா அபினவின் முகத்தைப் பார்த்தாள். அதில் இருந்து பெரிதாக எதுவும் கணிக்க முடியவில்லை. அவன் இலகுவாக இருக்கிறான். அவளை நிற்க சொல்லி ஓடோடி வேறு