This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
அபினவ், எனக்கு எந்த அவசரமும் இல்லை என்று சொல்லாமல் சொல்பவனாக அமைதியாக இருந்தான்.
வேறு வழியில்லாமல் அஹல்யாவே கேள்வியைக் கேட்டாள்.
“என்ன சொன்னாங்க அபினவ்?”
“அவங்க சொன்ன பதிலை விட கொடுத்த பொருள் முக்கியமானது.”
அபினவ் பாக்கெட்டினுள் இருந்து பேப்பர் பொட்டலத்தை எடுத்துப் பிரித்தான். அதனுள்ளே இருந்த தங்க சங்கிலியை கையில் எடுத்தான். பயன்படுத்திய தங்கச்சங்கிலி என்பது பார்த்ததுமே தெரிந்தது.
“இது எங்கம்மாவோட தாலி சங்கிலி. உங்களுக்காக அப்பா கொடுத்து அனுப்பினாறு.”
அபினவிடம் இருந்து அந்த தங்கச்சங்கிலியை வாங்கினாள் அஹல்யா. அவளின் கைகள் நடுங்கியது. கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.
“இப்போவாவது ஐ லவ் யூ சொல்வீயா அஹல்யா?” அபினவ் மீண்டும் அவளிடம் கேட்டான்.
அஹல்யா அபினவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மெளனமாக நின்றாள்.
“என் அப்பாவைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் அஹல்யா. அவர் ரொம்ப முற்போக்கா யோசிக்குறவர். பல வருஷத்துக்கு முன்னாடியே விதவை திருமணம்னு எல்லாம் முன்னாடி நின்னு நடத்தி இருக்கார். அவருக்கு கால் முட்டி வலி. ட்ராவல் செய்றது கஷ்டம். அதனால தான் அவரே நேரா உன்னைப் பார்க்க வரலை. உன் கிட்ட பேசிட்டு சொல்ல சொன்னார். ஃபோன்ல உன் கிட்ட பேசுறேன்னும் சொல்லி இருக்கார்.”
அஹல்யாவால் இப்போதும் பேச முடியவில்லை. என்ன மாதிரியான பதில் சொல்வது என்று அவளுக்குப் புரியவில்லை. அபினவ் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பக் கூட அவளுக்கு
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.