“இல்லப்பா உன் ஹஸ்பன்ட் இவ்வளவு சொல்றார்”
“அவர் சொல்றதை எல்லாம் கேட்டா ஒன்னும் நடக்காது சக்தி. நான் அபினவ் கிட்ட பேசுறேன். நாம நாளைக்கே அஹல்யாவை சந்திப்போம்,” என்றாள் சத்யா இப்போதும் அவளின் அமைதியானக் குரலில்!
🌼🌸❀✿🌷
அஹல்யாவின் ஸ்கூட்டியை பைக்கில் பின் தொடர்ந்து வந்தான் அபினவ். அவள் ஸ்கூட்டியை வீட்டிற்குள் நிறுத்த, அவனுடைய பைக்கை ரோட்டிலேயே நிறுத்தினான்.
அவர்கள் வந்தது தெரிந்து கேட்டின் பக்கத்தில் நின்று சீசர் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது.
பூட்டை திறந்து அருணை உள்ளே அனுப்பினாள் அஹல்யா. அவன் சீசரை தூக்கி செல்லம் கொஞ்சுவதை பார்த்து விட்டு அபினவிடம் வந்தாள்.
“இப்போ உங்க மனசு மாறி இருக்கும்னு நினைக்கிறேன். நான் சொன்னதை யார் கிட்டேயும் சொல்லாம இருப்பீங்கன்னு நம்புறேன். ஏற்கனவே இந்த ஊருல எனக்கு ரொம்ப நல்ல பேரு,” என்றாள் அஹல்யா பிசிறு தட்டும் குரலில்!
“ரொம்ப சரியா கெஸ் செய்திருக்க அஹல்யா.” அபினவ் அவளை தாண்டி சென்று கேட்டை திறந்து வீட்டினுள் சென்றான்.
அபினவுடைய செய்கை அஹல்யாவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
“அபினவ் நில்லுங்க. வீட்டுக்குள்ளே போக நான் உங்களுக்கு அனுமதி கொடுக்கலை.”
அபினவ் அவள் சொல்வதைப் பற்றி கவலைப் படாமல் அந்த வீட்டை அளவெடுப்பவன் போல உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அருண் சீசரை தடவி கொடுத்தப் படி நடப்பதை மருண்டுப் போய் பார்த்துக் கொண்டிருந்தான்.
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்