சென்றான். அடுத்து காவேரி வந்தாள்
”என்னப்பா சொல்றாரு உங்க மாப்பிள்ளை”
“மழையில நனைஞ்சதா சொல்றாரு, இந்த மாசத்தில ஏதும்மா மழை” என கேட்க அவளோ சிரித்துவிட்டு
”ஒண்ணுமில்லைப்பா இன்னிக்கு அவர் நிறைய வேலை செஞ்சி வேர்வையில குளிச்சிட்டாரு அந்த வேர்வை நாத்தம் போகலையா அதான் குளிச்சிட்டு வராரு”
“அதுக்குன்னு துணியோடவா குளிக்கனும்”
”அவருக்கு கொஞ்சம் இல்லை நிறைய கூச்ச சுபாவம் இருக்குப்பா”
”அப்படியா சரி சரி நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சி பயந்துட்டேன் சரி வாம்மா சாப்பிடலாம்”
”இதோ வரேன்பா நீங்க போங்க அவரை கூட்டிட்டு வரேன்” என சொல்ல கணக்குப்பிள்ளை உஷாராகி
”நானே கொம்பனை கூட்டிட்டு வரேன் நீங்க போங்க நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட்டுக்கிறோம்” என சொல்ல காவேரியோ
”நண்பனை காப்பாத்தறியோ”
”ஆமாம்”
”சரி போ” என சொல்லியவள் தன் தந்தையிடம்
”வாங்கப்பா நாம போய் சாப்பிடலாம்”