”கொழுப்பா உனக்கு என்னையும் எருமையையும் சேர்த்து வைச்சிப் பேசற”
”உண்மையை சொன்னா கசக்கதான் செய்யும், அதுக்காக பொய் சொல்லனுமா சாரிப்பா எனக்கு பொய் சொல்ல வராது”
”போதும் நிறுத்து நீ மட்டும் என்ன பெரிய உலக அழகியா ஏதோ நிறமா இருக்க , குண்டாதானே இருக்க, உன்னையும் வெள்ளை பன்னியும் பக்கத்து பக்கத்துல நிக்க வைச்சா ஒரே மாதிரி இருப்பீங்க”
”என்னைப் பார்த்து பன்னிங்கறியா“
”நீ மட்டும் என்னை எருமைங்கலாமா”
”சீய் என்னை விடு”
“முடியாது நீ சொன்னதுக்கு மன்னிப்பு கேளு”
”கேட்க முடியாது என்ன செய்வ”
”நீ சொல்றவரைக்கும் உன்னை விடறதாயில்லை இப்படியே உன்னை பிடிச்சி வைக்கிறேன் நீயே வலி தாங்காம மன்னிப்பு கேட்ப பாரு”
”உங்கப்பா அம்மாகிட்ட நீ என்கிட்ட இப்படி முரட்டுத்தனமா நடந்துக்கறதை பத்தி சொன்னா என்னாகும் தெரியுமா”
”சொல்லிக்க தாராளமா சொல்லிக்க, எனக்கு கவலையில்லை எனக்கு இப்போதைக்கு தேவை நீ என்னை அவமானப்படுத்தினதுக்கு மன்னிப்பு கேட்கனும் அவ்ளோதான்”
”சொல்ல முடியாது”