கெடுப்பது போல் வந்தாள் காவேரி
”இன்னுமா கண்ணை கசக்கற போதும் நடிச்சது” என சொல்ல அவனோ கோபத்துடன்
”நடிப்பா என்னைப் பார்த்தா நடிக்கறவன் போல தெரியுதா உனக்கு”
”ஆமாம்”
”உன் கண்ல கேளாறு இருக்கு, போய் கண்டாக்டரை பாரு”
”என் கண்ணு தெளிவாதான் இருக்கு, நீதான் குழம்பி போய் இருக்க நீ போய் டாக்டரை பாரு”
”நான் தெளிவாதான் இருக்கேன் இப்ப உனக்கு என்ன வேணும் சொல்லு”
”ஓ தெளிவாயிட்டியா சந்தோஷம் அப்படின்னா கிளம்பு”
”எங்க”
“எங்கயா என்ன வீட்லயே தண்டமா உட்கார்ந்து 3 வேளை சோறு சாப்பிடலாம்னு நினைப்பா உனக்கு”
”அதெல்லாம் இல்லை”
”அப்புறம் என்ன, எங்கப்பாவுக்கு பதிலா அவர் பார்த்துக்கிட்டிருந்த வேலையை இனி நீதான் பார்த்துக்கனும் மறந்துட்டியா”
“ஓ இது வேறயா” என அலுத்துக் கொண்டான் கொம்பன்
”ஆமாம் இன்னியில இருந்து ஆரம்பி, வா உனக்கு எல்லாத்தையும் கத்துக்கொடுக்கிறேன்”