நீ என்ன இந்த டைம்ல இங்கே???"
"அப்பா ஒரு வழியா கேட்டியே... நாம அன்னைக்கு பேசினோமே அந்த பிசினஸ் பத்தி மேல யோசிக்க வேண்டாமா? கஷ்டப்பட்டு கீதா அக்காவையும் பேசி கூட்டிட்டு வந்திருக்கேன்... அக்கா அங்க ரெஸ்டாரன்டில வெயிட் பண்ணிட்டு இருக்காங்க... வா நாம போய் லஞ்ச் சாப்பிட்டுட்டே பேசலாம்..."
"என்கிட்டே ஒன்னும் சொல்லவே இல்லை..."
"டைம் கிடைக்கும் போது பேசலாம்னு தானே அன்னைக்கு முடிவு செய்தோம்... கீதா அக்கா இன்னைக்கு காலையிலே தான் ஃப்ரீன்னு சொன்னாங்க... சரி நீயும் ஃப்ரீன்னா பேசலாம்னு தான் வந்தோம்... நீ பிஸின்னா ஈவ்னிங் மீட் பண்ணலாம்..."
"பிஸி எல்லாம் இல்லை.... ஒரு அஞ்சு நிமிஷம் கொடு... நான் நிலா கிட்ட செய்ய வேண்டியது எல்லாம் சொல்லிட்டு வரேன் அப்புறம் கிளம்பலாம்..."
பேசியபடி எழுந்த இந்துவின் பார்வை, அவள் மேஜை மீதிருந்த செல்ஃபோனிடம் சென்றது. ஏதோ தோன்றவும், அதை எடுத்துப் பார்த்தவள், சிறிது ஏமாற்றத்தோடு கிழே வைத்தாள். தோழியையே பார்த்தபடி இருந்த வீணா,
"என்ன ஆச்சு இந்து??? ஏதாவது பிரச்சனையா? என்ன விஷயம்???" என்று விசாரித்தாள்.
யோசனையுடன் வீணாவைப் பார்த்த இந்து, பின் ஒரு வெட்க சிரிப்புடன்,
"பிரச்சனை எல்லாம் இல்லை வீணா.... அன்னைக்கு சொன்னேனே சஞ்சீவோட புது பிசினஸ் பத்தி... இன்னைக்கு அண்ணா நகர்ல ஒரு பெரிய ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் கிட்ட பேச போறேன்னு சொன்னார்.... இன்னும் ஒரு நியூஸையும் காணும்..." என்றாள்
"ஓ!"
"சரி நீ இங்கேயே இரு நான் நிலாகிட்ட பேசிட்டு வரேன்...."