நோக்கி வருவதை பார்த்ததும், பைக்கில் இருந்து எழுந்தான்.
"நான் கேட்கவே மறந்துட்டேன்... அண்ணியும் இங்கே வருவாங்களா?"
"வராமல் என்ன சஞ்சீவ், கீதா அக்கா உள்ளே தான் இருப்பாங்க.... வாங்க...." என்றாள் வீணா.
"இல்லை... எனக்கு மறந்தே போச்சு... ரொம்ப முக்கியமான வேலை ஒன்னு இருக்கு.... சாரி, நீங்க போங்க. நான் இன்னொரு நாள் உங்க கூட வந்து சாப்பிடுறேன்...."
"ம்ம்ம்... முக்கியமான வேலை???? இப்போ இந்த செகன்ட் யோசிச்ச வேலை தானே சஞ்சீவ்???" என்றாள் வீணா கேலியாக.
"இல்லைங்க வீணா.... என ஃப்ரென்டை போய் பார்க்கனும்...."
"கீதா அக்காவை பார்க்க பயமா இருந்தா சொல்லுங்க... அதை விட்டுட்டு ஏன் இந்த பொய் எல்லாம்????" என்றாள் இந்து புன்னகையுடன்.
"அப்படி இல்லை... நான் அண்ணி கிட்ட நிறைய விஷயம் இன்னும் சொல்லலை... அவங்களுக்கு தெரிஞ்சு தான் இருக்கும்... இருந்தாலும்... இப்போ வேண்டாமே..."
"சரி எங்க கூட சாப்பிட வேண்டாம்... தனியா சாப்பிடுங்க... டைமுக்கு சாப்பிடனும்ங்க சஞ்சீவ்...." என்றாள் வீணா.
"நான் வேற ஹோட்டல்ல சாப்பிடுறேன்... நீங்க போங்க... அப்புறம், சொல்ல மறந்துட்டேனே... இந்த வருஷம் அண்ணா அண்ணி கல்யாண நாளை கொஞ்சம் கிராண்டா செலப்ரெட் பண்ணலாம்னு இருக்கோம்... நீங்க ரெண்டுப் பேரும் கட்டாயம் வரனும்.... டீடைல்ஸ் நான் சொல்றேன்..."
"என்ன சஞ்சீவ் நீங்க... நீங்க கூப்பிடாமலே நாங்க ரெண்டு பேரும் வருவோம்...." என்றாள் வீணா.