"ப்ச்... வீணா...."
"சரி சரி சினுங்காதே... நான் உனக்கு ஏதாவது நல்ல ஐடியா யோசிச்சு சொல்றேன்..."
"தேங்க்ஸ் வீணா... ஆனால் கீதா அக்கா கிட்ட இதை அப்புறமா சொல்லலாம்..."
"ஏன்???"
"கீதா அக்கா சஞ்சீவ் கிட்ட ஏதாவது உளறிட்டா... அப்புறம் சஸ்பென்ஸ் எல்லாம் போய்டும்..."
"அது சரி தான்.... சரி வா போகலாம்...."
இருவரும் கிளம்பி அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்தார்கள். வரவேற்பறையின் வெளியே சஞ்சீவ் இருக்கவும் இருவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
வீணா சந்தேகமாக இந்துவைப் பார்த்தாள். இந்து அதை கவனிக்காமல்,
"சஞ்சீவ், நீங்க எங்கே இங்க??? போன விஷயம் என்ன ஆச்சு?" என்று ஆர்வத்துடன் கேட்டாள்
புன்னகை மின்ன இருவரையும் பார்த்த சஞ்சீவ்,
"எல்லாம் சக்சஸ் தான்... " என்றான்.
"கங்கிராட்ஸ் சஞ்சீவ்..." என்றனர் இருவரும் ஒரே நேரத்தில்!
"தேங்க்ஸ்... வீணா, என்ன அப்படி சந்தேகமா இந்துவைப் பார்த்தீங்க? நான் இங்கே வந்தது இந்துவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தான்..."
"ஓஹோ... நீங்க சொன்னால் நம்ப வேண்டியது தான் சஞ்சீவ்..."