"நம்பி தான் ஆகனும் வேற என்ன வழி... சரி, எங்கே ரெண்டு பேரும் ஒன்னா வெளியே கிளம்பிடீங்க?"
இந்து அமைதியாக இருக்க, வீணாவே பேசினாள்.
"லஞ்சுக்கு தான் போறோம். நீங்களும் வர்றீங்களா?"
"ஆமாம் சஞ்சீவ்... நீங்களும் வாங்க...." என்றாள் இந்து.
"நீங்க இவ்வளவு கூப்பிடும் போது எப்படி வராம இருக்குறது.... எங்கே போறீங்க? நான் என்னோட பைக்ல வரேன்..."
"அஞ்சப்பர் சஞ்சீவ்... ஆமாம் உங்க புது கார் ஐடியா என்ன ஆச்சு?" என வினவினாள் வீணா.
"கார் மாடல் எல்லாம் செலக்ட் செய்துட்டேன்... கலர் செலக்ட் பண்ண இந்துவை கூட கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கேன்...."
"ஓ... நான் நடுவில டிஸ்டர்ப் பண்றேனோ???"
"ச்சே... என்ன வீணா நீங்க? அப்படி ஏதாவது நான் மனசில நினைச்சா கூட இந்து என்னை திட்டி தீர்த்துடுவாங்களே...."
"அதுக்குள்ளே அவ்வளவு பயமா?"
ஆம் என்று சஞ்சீவ் தலை ஆட்டவும், வீணா மட்டுமல்லாது இந்துவும் கூட சிரித்தாள்!
🌼🌸❀✿🌷
வீணாவின் கார் அந்த ஹோட்டல் வளாகத்தை அடைந்தப் போது, சஞ்சீவ் அவர்களுக்கு முன்பே வந்து காத்திருந்தான். வீணாவும் இந்துவும் காரை பார்க் செய்து விட்டு அவனை