(Reading time: 7 - 14 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

சொன்னது போல் சிறிது நேரத்தில் திரும்பி வந்த இந்து,

  

"வா வீணா கிளம்பலாம்..." என்றாள்.

  

கிளம்ப அவ்வளவு அவசரம் காட்டாத வீணா,

  

"இந்து, சஞ்சீவ் மேல உனக்கு இவ்வளவு அன்பு இருக்கும் போது ஏன் அவன் கிட்ட டைம் கேட்ட? அவன் ப்ரொபோஸ் செய்த உடனேயே எஸ் சொல்லி இருக்கலாம் தானே...??" என தன் மனதில் இருந்த சந்தேகத்தை தோழியிடம் கேட்டாள்.

  

ந்து தலையை அசைத்து மறுப்பாய் ஏதோ சொல்ல தொடங்கவும், அவளை தடுத்து,

  

"என் கிட்ட பொய் சொல்லாத இந்து... உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்... நீ இந்த மாதிரி வித்தியாசமா இருந்து நான் பார்த்ததில்லை... முகத்தில ஒரு நூறு வாட்ஸ் பிரகாசம்... எப்போவும் ஒரு ஸ்மைல்... கொஞ்சா நாளாகவே கொஞ்சம் குழப்பம்... ஆனாலும் ஒரு மலர்ச்சி... இதுக்கு எல்லாம் என்ன ரீசன்ன்னு எனக்கு தெரியாதா? உன்னை எனக்கு எல் கே ஜி க்கு முன்னாடி இருந்தே தெரியும்.... இந்த மாதிரி இப்படி ட்ரீம்ஸ்ல மிதக்குற இந்துவை இப்போ தான் நானே முதல் தடவை பார்க்கிறேன்..." என்றாள் வீணா.

  

தோழி சொல்வதை அமைதியாய் புன்னகையோடு கேட்டு கொண்டிருந்த இந்து,

  

"உன் கிட்ட மறைக்க என்ன இருக்கு வீணா? உண்மையா சொல்ல போனால்... அன்னைக்கு ஏன் அப்படி சஞ்சீவ் கிட்ட சொன்னேன்னு தான் நீ வரும் போது நானே யோசிச்சிட்டு இருந்தேன்... அன்னைக்கு நிஜமாகவே எனக்கு கொஞ்சம் கேள்விகள், குழப்பங்கள் இருந்துச்சு.... ஆனால் இப்போ என மனம் ரொம்ப தெளிவாயிடுச்சு... சஞ்சீவ் இல்லாமல் என்னால வாழவே முடியாது... ஆனால் அவர் கிட்ட இப்போ எப்படி சொல்றதுன்னு தான் தெரியலை...." என்றாள்.

  

"வேற எப்படி, வாய் வச்சு தான் சொல்லனும்..."

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.